வெள்ளி, 25 டிசம்பர், 2015

கைப்பை - 7

சாக்லேட்
       என் பள்ளி இறுதி காலத்தில் என் தோழிகள் தல,தளபதி புகைப்படங்களுக்காக காத்துக்கொண்டிருக்க, செய்தித்தாள் வந்ததும் நான் தேடியது வேற்றொரு புகைப்படத்தை.

சனி, 12 டிசம்பர், 2015

கடல் கடந்து நீண்ட கருணைக்கரம்



          சென்னை மழையில் திறந்து விடப்பட்ட ஏரிகள், இண்டு இடுக்கெல்லாம் புகுந்து வீதிக்கு இழுத்து வந்த எரிவாயு சிலிண்டர்களை போலவே வியப்பில் மிதக்க வைக்கின்ற அது சாலைக்கு இழுத்துவந்து சேவை செய்ய வைத்த சாதி மதம் கடந்த, ஊர்கள், எல்லைகள்  தாண்டிய  ஈரமும். அப்படி வியப்பில் ஆழ்த்திய, ஒரு கடல் கடந்த கருணைப் பெண்ணைப் பற்றிய உங்களோடு பகிர்த்து கொள்ள விரும்புகிறேன்.

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

இல்லைகளால் வந்த தொல்லைகள்


 சென்ற வருடம் நான் எழுதிய கவிதையில் இடம் பெற்ற இல்லைகள் இப்போ எத்தனை தொல்லைகளை வரவழைத்திருக்கிறது பாருங்கள்!!

திங்கள், 23 நவம்பர், 2015

நாட்டு நலனுக்கும் நடிகர் சங்கத்துக்கும் என்ன சம்பந்தம்!!!!!!!!

                  அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் என ஒரு வசனத்தை கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதே தான்......

ஞாயிறு, 15 நவம்பர், 2015

புத்தம்புது மலரே என் ஆசை சொல்லவா?

                                       உன் ஆசை என்ன என ஒருபோதும் நம் பெற்றோர் கேட்பதில்லை. அவர்கள் நம் ஆசைகளை தெரிந்தே வைத்திருப்பார்கள். நம் வாழ்கைத்துணையும் கேட்பதில்லை. அவர்கள் நமக்குத் தெரியாமல், அதை கண்டுபிடித்து நமக்கு வியப்பை தர விரும்புவார்கள். ஆனால் நான் சிறுவயதில் படித்த கதைகளில் தேவதைகள் திடீர் என தோன்றி அப்படி கேட்டதுண்டு. வளர்ந்த பின் தான் தெரிந்ததெனக்கு தோழிகள் தான் தேவதைகள் என்று. இதோ அப்படி ஒரு தேவதை என்னிடம் கேட்டிருக்கிறது "உங்க ஆசை என்ன மைதிலி டியர்?"


வியாழன், 12 நவம்பர், 2015

நானும் ரௌடி (நடிகை) தான்- நயன் தாரா

                       கடும் மழை தயவால் நான்கு நாள் தீபாவளி விடுமுறை கிடைத்தது. நானும் ரௌடி தான் படம் பார்த்தேன். குறைந்த பட்ஜெட் வித்தியாசமான கதை என எடுக்க நினைத்திருக்கிறார்கள்.

செவ்வாய், 27 அக்டோபர், 2015

பெப்ஸி - உங்கள் குளிர்பானம் எங்கள் நெருப்பை அணைக்காது!


                                               உலகமயமாக்கல்,  நுகர்வோர் கலாச்சாரம் போன்ற வார்த்தைகளை தெரிந்துகொண்ட நாளில் இருந்து விளம்பரங்களின் அழகியலை மீறி அதன் அரசியலையும் புரிந்துகொள்ளும் தெளிவு கைவரப்பெற்றிருக்கிறது. ஆனாலும் என்ன, குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்ற சிந்தனையோடு, பிரபு போல புரட்சி, போராட்டம் என்று இறங்காமல், நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை (எந்த நாலு பேர்?!) என கமல் (போல) கமர்ஷியல்களையும் சகிக்கப் பழகியாயிற்று.

திங்கள், 12 அக்டோபர், 2015

நன்றி!!! நன்றி!!! நன்றி!!!

பதிவர் திருவிழா 2015 மிக சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. முன்னெடுத்து நடத்திய நிலவன் அண்ணா தலைமையிலான புதுகை கணினி தமிழ் ஆசிரியர் சங்கம் பம்பரமாய் சுழன்று விழா வெற்றி பெற உழைத்தது நம் அறிந்ததே! டி.டி அண்ணாவின் உழைப்பு அசாத்தியமானது. 

வெள்ளி, 2 அக்டோபர், 2015

இது நம்ம கோட்டை!!

           மன்னர்களுக்குத் தான் கோட்டையா என்ன?? நம்ம நட்புக்கும் கோட்டை உண்டு. நாம் எழுதும் தமிழுக்குக் கோட்டை உண்டு. நம் தமிழ்ப் பதிவுலகிற்கு ஒரு கோட்டை உண்டு.

வியாழன், 1 அக்டோபர், 2015

புதன், 30 செப்டம்பர், 2015

துறைதோறும் இணையத்தமிழ் !!





   பிழையின்றி பிழைக்கின்ற உயிர் அனைத்தும் புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றலை,பிழையின்றித் தொடர்கின்றன! கூட்டுப்புழு வண்ணத்துப்பூச்சியாய் புதுப்பித்துக்கொள்கிறது! புதுப்பித்துக்கொண்ட குரங்கினம் தான் இன்று உலகையே நொடிக்குநொடி புதுப்பிக்கும் இனமாய் வளர்ந்திருக்கிறது. என்றும் எழில் குன்றா, இளைய தமிழுக்காக இந்த வித்தை தெரியாது?! நான்காம் தமிழாய் இணையத்தமிழும், ஆறாம் திணையாய் இணையமும் ஒருங்கே வளர்வது உலகறிந்ததே! சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என முரசுகொட்டிய முண்டாசுக்கவிஞனின் பாதையில் வீறுநடைபோட்டு சீறுகின்ற நம் தமிழ்ப் பட்டாளம் திசைதோறும் விரைந்து தொகுத்த, படைத்த செல்வக்களஞ்சியங்கள் உங்கள் பார்வைக்கு!

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

என் 64 மெய்நிகர் விழுப்புண்கள்!!




விருப்பக்குறிகள் என் வெற்றிப்புள்ளிகள்
வெறுப்புக்குறிகள் என் விழுப்புண்கள்
பகிர்தல்  நிலைதகவல்களோடு
முடிந்து போகின்றன- என்னளவில்

சனி, 26 செப்டம்பர், 2015

த்ரீ ரோஸஸ்!!

      இது டீத்தூள் பதிவு அல்ல:) மூன்று அறிமுகங்கள் பற்றிய பதிவு!! roses தான் இவர்கள் மூவரும் ஆனா அதில ரெண்டுபேர் படபட பட்டாசு. ஒருத்தர் அமைதிப்புறா!! 

திங்கள், 21 செப்டம்பர், 2015

இணையத் தமிழே சகம் வெல்க!

         ஒரு தீபாவளிக்கு திரையில் மின்னி, அடுத்த தீபாவளிக்கு காணாமல் போகும் திரைத்தாரகைக்களுக்கே அத்தனை வரலாறு என்றால் கிறிஸ்து பிறப்பதற்கு முன் மூன்றாம் நூற்றாண்டு முதலே எழுத்துருவை பெற்ற* நம் கன்னித்தமிழுக்குத் தான் வரலாற்றுக்கா பஞ்சம்! சங்கம் வைத்து சான்றோர்  வளர்க்க, தங்கமெனத்  தழைத்துத்தோங்கித் தரணியெல்லாம் மின்னிய தமிழ் மகள், வெள்ளையரால் மதம் பரப்பப் பணிக்கப்பட்ட பாதிரிமாரும், தம்மேல் மதம் கொள்ளச்செய்த தீங்கனியாள்!! தான் படித்தத் தமிழ்த்தேனை ஆங்கிலத்தில் வடித்து அவர்களும் பெற்றனர் அடையாப் பெரும்பேறு!!


வியாழன், 17 செப்டம்பர், 2015

சிற்பமே உன்னை செதுக்கிக்கொள்!

 

                 அது காலைநேர சாலை. உங்கள் அகநுட்ப விழியால் பார்க்கமுடிந்தால் புலப்படக்கூடும் ராக்கெட்டுகளை போல சைலன்சர்களில் புகையோடு நெருப்பும் கக்கும் வாகனங்களை. அந்த சாலையில் ஒரு ஆண் தன்னை முந்திச்செல்கையில், அவர் பணி, அவர் அவசரம் என பெரும்போக்காய் விட்டுவிடும் ஆண்கள், முந்தியது பெண் என்றால் அவளுக்கு ஒரு அடியேனும் முன்னே செல்லும்வரை அமைதியிழந்து போகிறார்கள். ஒரு சாலையில் ஒரு நொடிகூட தனக்கு முன்னே ஒரு பெண் செல்ல அனுமதிக்காத எத்தனையோ ஆண் ஈகோக்களை கடந்தே விரைந்துகொண்டிருக்கிறது  எங்கள் வண்டிகள்!
             

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

சொக்கா!!! சொக்கா!! 50000ரூபாய் .............50000ரூபாய் ............!!!!!!

“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

இது நம்ம ஏரியா!!


                     சில பேருக்கு புது இடத்துக்கு போக கொஞ்சம் தயக்கமா இருக்கும். சிலருக்கு பயமா கூட இருக்கும். இப்படி புதிய எதற்கும் பயப்படுவதற்கு  Neophobia என்பார்கள். ரைட்டு இந்த விஷயத்தை லெப்ட்ல left (விட்டு) பண்ணிட்டு, நம்ம புதுக்கோட்டைக்கு நீங்க வரதுக்காக தான் இந்த பதிவே.

வியாழன், 3 செப்டம்பர், 2015

மைக்கூ!! -6


நடுங்குகிற தேநீர்க் கோப்பையை
இறுகப் பற்றுகிறது
முதிர்ந்த விரல்கள்!
----------------------

புதன், 19 ஆகஸ்ட், 2015

கொஞ்சம் பதிவர் meet English!!!!- part xi

      எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கிச் செல்கின்றன என்பது போல எங்க பார்த்தாலும் புதுக்கோட்டை பதிவர் சந்திப்பான அழைப்புகளும், செய்திகளும் தான். புதுக்கோட்டைக்கார நானும் என் பங்குக்கு அழைக்கணும் இல்ல, so இப்போ கொஞ்சம் English பகுதியில் என் invitation:)


புதன், 12 ஆகஸ்ட், 2015

வண்ணத்துப்பூச்சிகள் மதிப்பெண்ணுக்காக அல்ல

                            "கையை நீட்டுங்க மிஸ்" என்றான் ஹரி. நீட்டினேன். "ரெண்டு கையும்" என்றவனின் கைகள் முதுகுக்குப் பின் இருந்தன. நான் கைல வெச்சதும் உங்க கையை மூடிக்கனும். சரியா? என்றான். வைத்தான். மூடினேன். மூடிய  கைகளுக்குள் ஒரு குறுகுறுப்பு.

புதன், 5 ஆகஸ்ட், 2015

கமலும், கலாமும் பின்னே நானும்.

                          திரும்பிய பக்கம் எல்லாம் கலாம்!!! இத்தனை அபிமானிகள் எத்தனை நாளாய் எங்கிருந்தார்களோ!!!!! டாக்டர் அப்துல் கலாமுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பிரபலங்கள் அனைவரும் ட்விட் முதல் கவிதை வரை  பலவிதமாக தங்கள் கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

திங்கள், 27 ஜூலை, 2015

வாங்கண்ணா!! வணக்கமண்ணா!

                                   உங்களுக்கும் என்னைப் போல  மழை தொடங்கும் மண்வாசம் பிடிக்குமா? பொழிந்து கொண்டிருக்கையில் தேநீர் பிடிக்குமா? மழை ஓய்ந்தபின் கிளை உலுக்கி நனையப்பிடிக்குமா? புதுப் புத்தகத்தை பிரித்தவுடன் நுகரப்பிடிக்குமா? உச்சி வெயில் ட்ராபிக்கில் அடுத்த வண்டியில் பிஞ்சு கையசைக்கும் பிள்ளை நிலாக்கள் உங்களை ஆற்றுப்படுத்துமா? அப்போ கண்டிப்பா இதுவும் பிடிக்கும்.

வியாழன், 23 ஜூலை, 2015

ஷர்மிலி மிஸ் !!! நீங்க நல்லவங்களா? கெட்டவங்களா?

          "குழந்தையை நீங்க எப்படி அடிக்கலாம் . ஆயிரக்கணக்குல பீஸ் கட்டி படிக்கவைக்கிறது உங்க கிட்ட அடி வாங்கவா?. இன்னும் எந்த காலத்தில இருக்கீங்க  ..." 
சுதனின் கோபத்தை எதிர்பார்க்காத ஷர்மிலி மிஸ்ஸின் முகம் பயத்தில் மாறியது 

சனி, 18 ஜூலை, 2015

பீதி கிளப்புகிறது சாதிவாரி கணக்கெடுப்பு!

                    இந்த சாமியை போல இந்த சாதியையும் வைத்த இடத்தில சத்தமில்லாமல் இருந்துவிட்டால் எனக்கு எந்த சச்சரவும், சங்கடமும் இல்லை தான். (என்ன ஒரே "சா" வா இருக்கே மைதிலி! சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட்டா ஒரே சாவா இருக்குமோன்னு ஒரு டென்ஷன் தான்)

சனி, 11 ஜூலை, 2015

இந்த முறை நான் விட்டுக்கொடுப்பதாக இல்லை.

                                 மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்க விடுவதில்லை. நான் அரசியல் எழுதாமல் சும்மா இருந்தாலும்  மோடிவிடுவதில்லை. மறுபடியும் மொதல்ல இருந்தே எழுதவைக்கிறாரே மோடி:(

செவ்வாய், 30 ஜூன், 2015

கொலையா?? தற்கொலையா??

        பொதுவாக ஒரு மொழி அழியும்போது, அதை பேசும் இனமும் அழிந்துபோகும். அதாவது தமிழ் அழிந்துபோனால், தமிழன் அழிந்து போவான். ஒட்டுமொத்தமாக அந்த இனமே செத்துபோகாது, ஆனால் அடையாளங்கள் அளிக்கப்பட்டு, ஒரு அகதி இனமாய், வேற்றொரு இனத்தோடு ஒண்டி வாழவேண்டியது தான்.

புதன், 24 ஜூன், 2015

காக்கா முட்டை- திரைப்பார்வை

        மீண்டும் ஒரு அருமையான படைப்பை முன்னிறுத்தி, பதிவெழுத தூண்டிய இயக்குனர் மணிகண்டன் அவர்களுக்கு முதலில் ஒரு நன்றியும், பூங்கொத்தும்..........

 

சனி, 23 மே, 2015

தற்கொலை செய்துக்கப் போறீங்க! ஒரு நிமிடம் ப்ளீஸ்!



           இது தன்னம்பிக்கைக்கட்டுரை இல்லை. மாறாக தற்கொலைக்கு உதவும் விதமாக வழிசொல்லும் பதிவும் இல்லை. தற்கொலை செய்து கொள்ள போகிறவர்களிடம் கேட்க நினைக்கும் ஒரு நியாயமான  கேள்வி. அதற்கு பதில் தேடித்தான் இந்த பதிவு.

ஞாயிறு, 10 மே, 2015

அமுதுக்கு செம்மொழி என்று பேர்!







குத்தகைக்கு எடுத்தாளா-இல்லை

கொள்முதல் விலைக்கே
வாங்கினாளா தெரியவில்லை
பால்குளத்தில் நீந்த விட்டிருக்கிறாள்
விழிமீன்கள் இரண்டையும்!

சனி, 9 மே, 2015

பார்ப்பனர்கள் ஏன் பகுத்தறிவுவாதிகளின் எதிரியாகிறார்கள்???

          ஊரெல்லாம் சாதி சங்கங்கள் இருக்க, குடிசைகள் பற்றி எரிய, தீண்டாமைச்சுவர்கள் வளர்ந்தோங்க, இளவரசன்கள் சாக, அத்தனையையும் விட்டுவிட்டு ஏன் பார்ப்பனர்களை மட்டும் பகுத்தறிவுவாதிகள் குறி வைக்கிறார்கள்.



சனி, 25 ஏப்ரல், 2015

பகுத்தறிவு என்றால் எங்க பாஸ்!!

எல்லா சாதியையும் தானே சொல்லிருக்கார்!!!
          

            இந்தமுறை தொடர்பதிவு  என அறிவிக்காமலே ஒரு தொடர்பதிவை தொடங்கிவைத்திருக்கிறார்  தமிழன் சகா:) ஒரு மாதம் கழித்து  வலைப்பக்கம் எட்டிப்பார்க்கிறேன். வகுப்புக்கு தாமதமாக வந்த மாணவனை வெளியே நிறுத்தி கடினமான கேள்வி கேட்பதை போல பகுத்தறிவாளர்கள் பதில் சொல்லுங்க சொல்லிப்புட்டார். பெரியார், ஏங்கல்ஸ், மார்க்ஸ் அளவு நமக்கு சொல்லத் தெரியாட்டியும், நம்ம மணிவண்ணன் அய்யா ஸ்டைல சொல்லலாம்னு பார்க்கிறேன். தமிழனின் இந்த பதிவை படித்துவிட்டால் கீழ் உள்ள பதிவு கொஞ்சம் தெளிவா புரியும்னு நினைக்கிறேன்.

வியாழன், 5 மார்ச், 2015

பெண்மையை நான் மதிக்கிறேன்.

       





           இந்தியாவின் மகள் என்கிற டாக்குமெண்டரி, பெண்கள் தெய்வம், நதிகள்,பூமி எல்லாமே பெண் தெய்வம் தான் என இதுவரை நம் நாட்டில் பலர் அணிந்தது வரும் மூகமூடியை கிழித்தெறிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்தியால எல்லா ஆண்களும்  அப்படித்தானா என்கிற எண்ணம் உலக அளவில் தோன்றத்தானே செய்யும். இப்படியான ஒரு சூழலில் எனது அன்பு அண்ணன் நிலவன் அவர்கள் தொடங்கி வைத்திருக்கும் இந்த தொடர்பதிவு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது. இந்த மகளிர் தின ஜோதியை ஏந்தி இந்த பதிவை அவருக்கே சமர்ப்பிக்கிறேன்.


புதன், 4 மார்ச், 2015

கடலைமன்னன் -part 2

                   



                   இவரை பற்றிய முதல் பதிவு எழுதி, சற்றேறக்குறைய ஒரு மாதம் ஆகிவிட்டது. பபிதா தொடர்ந்து வாசித்தாள். இனி  கார்வரின் கதை. 

புதன், 25 பிப்ரவரி, 2015

கைப்பை-6 நட்பும் நட்பின் நிமித்தமும்.





                 ரொம்ப நாள் கழிச்சு வரேன். நான் பிளான் பண்ணிட்டு வந்தது வேற. ஆனா இந்த பத்துப்பதினைஞ்சு நாளில் நம்ம வலையுலகம் மகிழ்ச்சி, துயரம்,கோபம் என ஒரு மசாலா பட அனுபவத்தை எனக்கு இந்த நாட்கள் தந்திருக்கிறது.

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

மனிதம் பேசும் விளம்பரங்கள்

       
  சமீப காலமாக இயல்பாய் படமெடுக்கிறேன் பேர்வழின்னு மூணு மணி நேரமும், டிக்கெட் காசும் தண்டமோ என நொந்து போக செய்யும் படங்கள் பல. கொஞ்சம் ஊன்றி கவனித்தால், கதையை தப்பான ட்ரீட்மென்டில் படமாக்கி இருப்பார்கள். அல்லது சுமார் கதையை திரைக்கதையால் தூக்கி நிறுத்துகிற படங்களும் உண்டு.

திங்கள், 2 பிப்ரவரி, 2015

வயலின் - என் நிறைவேறாத காதல்.

               



       உடலும் , மனமும் சோர்ந்து போயிருந்த ஒரு மாலையின் முடிவில், இரவின் தொடக்கத்தில் எப்போதடா இரவு உணவை முடித்து, படுக்கையில் சாயலாம் என சமையல் முடித்து,இரவு உணவை எடுத்து வைத்துக்கொண்டிருந்தேன். ஹாலுக்கு போனவளை, அங்கேயே நிறுத்தி வைத்தது அந்த இசை. செல்பேசிக்கு அந்த பாடலை தரவிறக்கி பாட கத்துகொடுத்தேன். அன்று தூங்க வெகு நேரமானது.

                 

வியாழன், 29 ஜனவரி, 2015

குறும்பாவில் பட்ட விழுப்புண்கள்!

      



                   தலைப்புக்காக விஜூ அண்ணா என்னை மன்னிப்பாராக!! சில சமயம் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் நம்மை படுத்தி எடுத்துவிடும். செலவழிந்த பணத்தை கூட சம்பாரித்துக் கொள்ளலாம், ஆனா விட வார்த்தையை மீட்க முடியாது இல்லையா?


திங்கள், 26 ஜனவரி, 2015

ஒரு அழகான பெண்ணும், சில அடாவடி பசங்களும்.....

      சென்ற வாரம் ஒரு youtube பகிர்வை காண நேர்ந்தது. முதலில் துறுதுறு குட்டி பசங்க ஆறு பேர் அறிமுகம் செய்யப்படுகிறார்கள். அவர்கள் பெயர், வயது, வாழ்க்கை லட்சியம் எல்லாம் கேட்படுகிறது. அவ்ளோ அழகாய் அதற்கு பதில் அளிக்கிறார்கள். பின் ஒரு அழகான பெண் அவர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகிறாள்.

வெள்ளி, 23 ஜனவரி, 2015

கடலை மன்னன் கார்வரும், என் ஏழாம் வகுப்பு மாணவர்களும்

இது தான் அந்த புத்தகம் 



            

                இருபதாம் தேதி ஆனாலே என் பிரியத்திற்குரிய மாணவச்செல்வங்கள் கொஞ்சம் டரியல் ஆகிவிடுவார்கள். ஆங்கில வாசித்தல், எழுதுதல் திறன் சோதனை மாதத்திற்கொருமுறை நடத்தப்படும் அந்நாட்களில் சின்ன பதட்டமும், பரபரப்புமாகவே இருப்பார்கள்.

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

Break the rule- லேடீஸ் ஹாஸ்டல் (ஆட்டோகிராப் பக்கங்கள்-iv)

               நேற்று என் அன்பு இளவல் நிஸாரின் உறவினர் வீட்டில் திருமணம். பொங்கல் அன்று என் தம்பி சரத்தும், நிஸாரும் அழைப்பு தந்து அவசியம் வரணும் என்று கூறி கிளம்பியபின், மதி அழைத்தாள் "அக்கா! நீ  நிக்காஹ் க்கு போகப்போற தானே?." நல்லா ரைமிங்கா தான் கேட்கிற. பின்ன போகாம இருக்கமுடியுமா? நம்ம நிஸார் வீட்டு கல்யாணம் ஆச்சே" என சொல்லும்போதே சந்தானத்தின் பஸீர்  பாய் கல்யாணம் ஜோக் நினைவு வந்துவிட, நான் சொல்லாமலே அவளுக்கு அந்த ஜோக் நினைவு வந்துடுச்சுபோல.

செவ்வாய், 13 ஜனவரி, 2015

ஆதரவுக்கு நன்றி சகாஸ்!

       



    
          
வணக்கம் நட்புகளே! சென்ற பதிவு ஓர் உளவியல் பரிசோதனை என்றால் நம்புவீர்களா:)  ஆம். ஒரு முறை ரீடர் டைஜஸ்ட் புத்தகத்தில் self-estimation பகுதியில் பத்து கேள்விகளும், இது அல்லது அது பாணியில் இரண்டு விடைகளும் கொடுத்திருப்பதை முயன்று பார்த்தேன். இது நடந்து பல வருடங்கள் ஆன பின்னாலும் அதில் இரண்டே இரண்டு கேள்விகள் மட்டும் நினைவிலேயே தங்கிவிட்டன.

புதன், 7 ஜனவரி, 2015

என்னவொரு காம்போ!!

          
               
        சென்ற வாரம் என் தங்கை மதியின் கணவர் பழநி, பழநி சென்றுவந்து (ஆமா first பழநி கோ-ப்ரதர் பழநிச்செல்வம்) பிரசாதம் கொடுத்திருந்தார். என் அத்தை பயபக்தியாய் திருநீர் எடுத்துகொள்ள, நானோ பஞ்சாமிர்தத்தை தேடினேன்.



ஞாயிறு, 4 ஜனவரி, 2015

இதுவும் மோடி அரசின் சாதனை தானா? self assessment

             ஒரு வாரம் ஆகிவிட்டது கயல் படம் பார்த்து. ஆனால் பிரபு சாலமன் இந்த முறை ஏனோ என்னை இத்தனை சங்கடத்துக்கு ஆளாக்கி இருக்கிறார்.