tag:blogger.com,1999:blog-1696328621860497521.post1306912358601535755..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : தந்தை போற்றுதும்!!மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-84872160660835675192015-12-27T15:31:54.814+05:302015-12-27T15:31:54.814+05:30"என் தலையை அடகு வைத்தாவது உன் கடனைத் திருப்பி..."என் தலையை அடகு வைத்தாவது உன் கடனைத் திருப்பித் தருவேன்" என்று சொன்னதற்கு, எந்த அடகுக்கடையில் மனிதத்தலையை வாங்கிக் கொள்வார்கள் என்று கேட்டானாம் அறிவாளி ஒருவன். நீயும் அப்படிப்பட்ட ஒரு மேதாவிதான் போல. ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்கிறார்களே அதற்கு ஏட்டிக்குப் போட்டியாகப் பெண்களும் நடந்து கொள்ளத் தொடங்கினால் ஆண்களால் தாங்க முடியுமா என்று சிந்திக்கத் தூண்டுவதுதான் பெரியாரின் மேற்படி கருத்துடைய பொருள். அதைப் புரிந்து கொள்ளாமல் பெரியாரைப் போற்றும் அனைவரையும் இழிவுபடுத்த வேண்டும் எனும் ஒரே நோக்கில் கருத்துரைக்கும் ஈனப்பிறவியே, முதலில் படிக்கிற வார்த்தைகளுக்குப் பொருள் புரிந்து படிக்கக் கற்றுக் கொள்! அதன் பிறகு அடுத்தவர்களைக் கேள்வி கேட்கவும் கருத்துரைக்கவும் கிளம்பு! புரிகிறதா?இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-47216902979548025922015-12-25T20:42:36.523+05:302015-12-25T20:42:36.523+05:30இவ்வதிகாரத்தில் உள்ள எட்டுப் பாடல்களும் ஆண் பிள்ளை...இவ்வதிகாரத்தில் உள்ள எட்டுப் பாடல்களும் ஆண் பிள்ளைக்கும் பெண் பிள்ளைக்கும் பொதுவானவை. இந்தக் குறள் உட்படக் கடைசி இரு குறள்கள் ஆண் மகனுக்கு மட்டுமே சொல்லட்டப்பட்டவை.<br />தன் மகன் அறிவாளி என்று பிறர் கூறித்தான் ஒருதாய் கேட்க வேண்டும் என்பதில்லை. அதைப் அறியும் வாய்ப்பு அவளுக்கு நேரடியாகவே பலதருணங்களில் வாய்க்கும்.<br />ஆனால், தன் மகன் வீரன் என்று பார்த்தறியும் வாய்ப்பு அவளுக்குக் கிட்டுவதில்லை.<br />ஏனென்றால் போர் நடைபெறும்போது பெண்கள் அங்கு அனுமதிக்கப்பட்டதில்லை என்பது பண்டைப்போர் ஒழுங்கு.<br />எனவே அவன் போர்க்களத்தில் ஆற்றிய பெருந்திறத்தைப் பிறர் கூறக் கேட்க மட்டுமே அவளால் முடியும்.<br />‘தன் மகனை ஈன்ற பொழுதைவிட எப்போது பெரிதுவப்பாள்?’ என்பதற்குப் பூங்கண் உத்திரையர் பாடிய.<br />“ மீன் உண் கொக்கின் தூவி அன்ன<br />வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்<br />களிறு எறிந்து பட்டனன்' என்னும் உவகை<br />ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர்<br />நோன் கழை துயல்வரும் வெதிரத்து<br />வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே “ (277)<br />மற்றும்,<br />காக்கைப்பாடினி நச்செள்ளையின் மிகப் பிரபலமான,<br />“ நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள்,<br />முளரி மருங்கின், முதியோள் சிறுவன்<br />படை அழிந்து, மாறினன்' என்று பலர் கூற,<br />'மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்ட என்<br />முலை அறுத்திடுவென், யான்' எனச் சினைஇ,<br />கொண்ட வாளொடு படு பிணம் பெயரா,<br />செங்களம் துழவுவோள், சிதைந்து வேறு ஆகிய<br />படு மகன் கிடக்கை காணூஉ,<br />ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே! ”(278)<br />என்னும் இரண்டு புறநானூற்றுப் பாடல்களையும் சான்றுகாட்டுகிறேன். இவ்விரு இடங்களிலும் தாய், தன் மகன் அறிவாளி என்பதைக் கேட்டன்று; வீரன் என்றே ஈன்ற பொழுதில் பெரிதும் மகிழ்கிறாள்.<br />ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் இடமாக நானறிந்தவரை மகன் வீரமரணம் அடைந்தான் எனக் கேட்பதுதான் சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. கால ஆய்வில், புறநானூறு திருக்குறளுக்கு முற்பட்டது என்பது தெளிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னோர் மொழி பொருளை பொன்னே போல் போற்றுவது என்பது நூல் யாக்கும் தமிழ் உத்திகளில் ஒன்று. எனவே புறநானூறில் சொல்லப்படும் பொருள் கொண்டு திருக்குறளை அணுகுதல் என்வரை சரியெனப்பட்டது,<br />எனவே மீண்டும்,<br />“சான்றோன் என்றால் அறிவாளி என்பதே சரி நம் விருப்பத்துக்கும் இடத்துக்கும் ஏதுவாகப்பொருள் படுத்துவது சரி அல்ல“ என்ற உங்களின் கருத்தின் பிற்பாதியை ஏற்று முற்பாதியை ஏற்க இயலாமல் இருக்கிறேன் . இவ்விடங்களில் தாங்கள் சான்றோன் என்பதற்கு அறிவாளி என்பதே சரியான பொருள் என்று சொல்வதற்கான சான்றுகள் இருப்பின் அறியத்தருக. அறிந்திட ஆவலாய் இருக்கிறேன்.“““““““““““““““““““““<br /><br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-2589702855160571752015-12-25T20:41:20.780+05:302015-12-25T20:41:20.780+05:30இனிச் ‘சான்றோன்’ என்பதற்கு நான் எனது விருப்பத்தின்...இனிச் ‘சான்றோன்’ என்பதற்கு நான் எனது விருப்பத்தின்படி ‘வீரன்’ எனப் பொருள் சொல்லவில்லை இதே பொருளிலேயே சங்க இலக்கியத்தில் இச்சொல் ஆளப்பட்டுள்ளது என்பதற்கான சில சான்றுகள் வருமாறு, <br /><br />“எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்து<br />நோன்புரித் தடக்கை சான்றோர் மெய்ம்மறை”<br /><br />என்னும் பதிற்றுப் பத்தின் இரண்டாம் பத்தில் சான்றோர் என்பதற்குப் போர்வீரர் எனப் பொருள் உரைக்கிறார் அதன் பழைய உரையாசிரியர்.<br /><br />இதன் ஏழாம் பத்தில்<br /><br />“ எஃகொடு ஊணங்கடுப்ப மெய்சிதைந்து<br />சாந்தொழில் மறைந்த சான்றோர் பெருமகன்“<br /><br />என்னும் இடத்தில், தன் உடம்பில் பட்ட புண்களைச் சாந்தினைப் பூசி மறைத்த வீரனின் மகனிவன் என்று பொருளுரைக்கப்படுகிறது.<br /><br />பழந்தமிழில் சான்றோன் என்பவன் வீரன் எனப்பட்டான் என்பதற்கு இன்னும் சான்று காட்டமுடியும். சான்றோன் என்ற சொல்லே மற்றவர்க்குச் சான்றாய் வாழ்ந்தவன் என்ற பொருளில் இருந்து தோன்றியதாய் இருக்க வேண்டும். சங்க காலம் என்று சொல்லப்படுகின்ற வீர ஊழியின் போது பிறருக்குச் சான்றாய் வாழ்ந்திருப்பவன், கற்றவன் என்பததைக் காட்டிலும், களத்துப் பட்டவன் என்றலே பொருத்தமாக அமையும்.<br /><br />அடுத்து,<br /><br />“ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்<br />சான்றோன் எனகேட்ட தாய்“<br /><br />என்ற குறள்,<br /><br />இங்குப் புலவர்களால் பயில வழங்கும் பரிமேலழகர் உரையில் சான்றோன் என்பதற்குக் ‘கல்வி கேள்விகளால் நிறைந்த அறிவுடையவன்’ என்றே பொருள்கூறப்படுகிறது.<br /><br />ஓர் இலக்கியத்தை அதன் உரையைப் பார்க்கும்போது அது எழுந்த காலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்னும் கருத்து இங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. <br />ஏறக்குறைய பரிமேலழகரின் காலம் வீரயுக காலத்திற்கு மிகப்பிற்பட்டகாலம். வீரம் மதிக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து கல்வி கேள்வி அடைதலே பெருமை எனப்பட்ட காலம், அதிலும் இன்னார்க்கு இன்னது என்ற வருணாசிர தர்மமும், பெண்ணடிமைத்தனமும் காலூன்றி வலுவடைந்த காலம்.<br /><br />இக்குறள் இடம் பெற்ற அதிகாரம் “மக்கட்பேறு“ என்று பரிமேலழகருக்கு முன் வாழ்ந்த உரையாசிரியர்களால் எடுத்தாளப்பட்ட தலைப்பைப் பரிமேலகழர் , “புதல்வரைப் பெறுதல்“ என்று மாற்றுவதில் இருந்தே அவர் வாழ்ந்த காலத்தில் ஊடுருவிய வைதிகக் கலப்பை நாம் அவதானிக்கலாம். மக்கள் என்றால் என்ன புதல்வர் என்றால் என்ன சொல்வேறுபாடுதானே என்றால், புதல்வன் என்ற வடசொல்லுக்குள் இருக்கும், “பிள்ளை இல்லாதவர்கள் விழக் கூடிய ‘புத்’ என்னும் நரகில் இருந்து பெற்றோரைக் காப்பதால் புதல்வன் ஆகிறான்“ என்கிற புராண அடிப்படையில் அமைந்த சொல்விளக்கத்தை மக்கள் என்னும் தமிழ்ச்சொல் தருவதில்லை. எனவேதான் அது மாற்றப்பட்டுள்ளது.<br /><br />இங்குக் கேட்ட தாய் என்பதற்கும், ( தன் மகன் கல்வி கேள்விகளில் சிறந்த அறிவாளி என்பதைப் ) பெண் இயல்பால் தானாக அறியாமையால் ‘கேட்ட தாய்’ என்று வள்ளுவர் கூறினார் என்று பரிமேலழகர் கூறுவதும் அவர் காலத்திய பெண்ணடிமைத்தனம் நிறைந்த சமூகத்தின் புலமைக்கூச்சலே!<br /><br /><br />...............தொடர்கிறது.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-36936100186390149812015-12-25T20:40:11.065+05:302015-12-25T20:40:11.065+05:30வணக்கம்.
மாற்றுப்பணி ஒன்றில் இருப்பதால் இணையம் வர...வணக்கம்.<br /><br />மாற்றுப்பணி ஒன்றில் இருப்பதால் இணையம் வரவும் பின்னூட்டங்கள் இடவும் வாய்க்கவில்லை. உங்களின் இந்தப் பதிவிற்கு வேறொரு காரணத்திற்காக வந்தேன் எனினும், “ சான்றோன் ” என்பதற்கு என் http://oomaikkanavugal.blogspot.com/2015/10/blog-post_30.html பதிவொன்றின் பின்னூட்டத்தில் இருந்து சில கருத்துகளை முந்தைய கருத்தின் தொடர்ச்சியாக இங்கும் பகிர்ந்து போகலாம் எனக் கருதினேன்.<br /><br />“““““““““““““““““சான்றோன் எனும் இடத்தில் வீரன் என்று பொருள் படுத்திக் கொள்வது எனக்கு உடன்பாடாய் இல்லை. சான்றோன் என்றால் அறிவாளி என்பதே சரி நம் விருப்பத்துக்கும் இடத்துக்கும் ஏதுவாகப்பொருள் படுத்துவது சரி அல்ல““““““<br />என்பதில் நம் விருப்பத்துக்கும் இடத்துக்கும் ஏதுவாகப் பொருள்படுத்துவது சரியல்ல என்ற உங்களின் கருத்தோடு நானும் உடன்படுகிறேன். <br />“ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே;<br />சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;<br />வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;<br />நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,<br />ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி,<br />களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.“<br />என்ற பொன்முடியாரின் புறநானூற்றுப் பாடலுக்குப் பழைய உரை இல்லை. இப்போது சொல்லப்பட்டு, படிக்கப்பட்டுவரும் உரைகள் சுவடிகளில் இருந்து அச்சுவடிவம் பெற்றபின் வாழ்ந்த தமிழறிஞர்களால் உரைக்கப்பட்டதுதான். சற்றேறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழை அவர்கள் புரிந்து கொள்வதும் பொருளுரைப்பதும் மிகக்கடினமே. ஆனாலும் அதனை அவர்கள் தங்களால் இயன்றவரையில் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். சங்க இலக்கியம் குருபரம்பரையில் பயிற்சியிலும் தொடர்ந்திருக்கவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அது பெரும்பாலானோரின் பயிற்சியில் இருந்தே மறக்கடிக்கப்பட்டிருந்தது என்பது உ.வே.சா.வின் என் சரித்திரத்தால் தெரியவருகிறது. இதுபோன்ற சூழல்களில் இன்று பயன்பாட்டில் இருக்கும் ஒருசொல் சங்க இலக்கியத்தில் காணப்படும்போது, இன்றுநாம் வழங்கும் பொருளை அப்படியே எடுத்து அன்றைய இலக்கியத்திற்குப் பொருத்திப் பார்க்கும் சூழல் ஏற்பட்டுவிடுகிறது. இது இயல்பானதே! ஆனால் சரியானதன்று.<br />இந்தப்பாடலுக்குத் திணை துறை குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை பழமையானவை. ஓலைச்சுவடியிலேயே இருந்தவை.<br />இப்பாடலின் திணை வாகை. இது போர்க்களத்தின் வெற்றி பற்றிப் பேசக்கூடியது.<br />மூதின் முல்லை என்பது, மறக்குடி மகள் ஒருத்தி, தன் குடியின் பெருமையை அது சார்ந்த வீரத்தைப் பேசுவது.<br />சங்கப்பாடல்களின் திணை துறைகள் என்பன சங்கப்பாடல்களைப் பார்ப்பதற்குரிய சாளரங்கள் என்பதைப் பயின்றோர் அறிவர். அவ்வாறு நோக்குங்கால் இப்பாடலின் திணையும் துறையும் போர் வெற்றியும் குடிப்பெருமிதமும் கூறுவனவாகக் கொண்டுதான் இப்பாடலை அணுக வேண்டும். ஒரு வீரப்பெண்மகள் தன் குடிப்பெருமையை, தன் இல்லத்தில், தான் வாழும் சமூகத்தில் இருப்பவர்களின் ஒவ்வொருவரின் கடமையை கூறுவதன் வாயிலாகச் சொல்வதாகவே இந்தப்பாடல் அமைகிறது.<br />‘மகனைப்பெறுதல் எனது கடமை. அவனை வீரனாக்குதல் தந்தையின் கடமை. அவன் போர் செய்வதற்கு வேண்டிய தளவாடங்களை அமைத்துத்தருதல் கொல்லனின் கடமை. அவனது வீரத்தையும், ஆயுதங்களையும் நல்லவழியில் பயன்படுத்திக் கொள்ளுதல் அரசனின் கடமை. ( இங்கு நன்னடை என்பதற்குத் தண்ணடை என்கிற பாடவேறுபாடும் உண்டு. அதுவே இந்தப் பாடலுக்கு மிகப்பொருத்தமாக அமையும். வெற்றி ஈட்டும் வீரனுக்குக் குளிர்ந்த நீர் வளமிக்க வயல்களை அளித்துப் புரத்தல் வேந்தனின் கடன் என்பதாக அதற்குப் பொருள் அமையும். ) வாள்சுழற்றிச் சென்று பகையழித்து, யானையும் கொன்று திரும்புதல் என் மகனின் கடமை ஆகும்’ என்று அந்தத் தாய் சொல்கிறாள்.<br />இங்குக் களிறெறிந்து பெயர்தலும் ஆயுதமேந்திப் பொருதலும் வீரர்க்குரியனவா அல்லது அறிவாளிக்குரியனவா?<br />கல்விக்கூடம் பற்றியோ ஆசிரியர் பற்றியோ இந்தப் பாடலில் சொல்லப்பட்டுள்ளதா?<br />போரும் வீரமும் வெற்றியும் சொல்லப்படும் பாடலில் வரும் சான்றோன் என்பதற்கு வீரன் என்பதாய்ப் பொருள் கொள்வது பொருத்தம் உடையது என நான் கூறியதற்கான பின்னூட்டத்தில், ““““சான்றோன் என்றால் அறிவாளி என்பதே சரி நம் விருப்பத்துக்கும் இடத்துக்கும் ஏதுவாகப்பொருள் படுத்துவது சரி அல்ல“““““““““ என்று நீங்கள் குறிப்பிட்டதற்கான சான்றுகள் ஏதுமிருப்பின் தர வேண்டுகிறேன்<br /><br />.......தொடர்கிறது.<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-49577948558675681482015-12-25T10:37:54.944+05:302015-12-25T10:37:54.944+05:30சரி விடு மைதிலி, மனநிலை “பாதிக்கப்பட்ட” ஒரு பெரியவ...சரி விடு மைதிலி, மனநிலை “பாதிக்கப்பட்ட” ஒரு பெரியவர் சொல்வதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றுதான் அந்தப் பெரியவரே சொல்லிவி்ட்டாரே! ஆமா..நான்தான் கேக்குறேன், “ஆண்கள் இரண்டு வைப்பாட்டி வைத்துக்கொண்டால் பெண்கள் மூன்று ஆசைநாயகர்களை வைத்துக்கொள்ள முற்பட வேண்டும்” என்று பெரியார் சரியாகத்தானே சொல்கிறார்? இதில் என்ன கருத்து வேறுபாடு வந்தது. பெண்ணின் பார்வையிலிருந்து வெளியான ஓர்எச்சரிக்கைக்கே இந்தக் குதி குதிப்பவர்கள், அப்படி வைத்திருக்கும் ஆண்களை இதுவரை என்னதான் செய்தார்களாம் ? நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-18506034457815755192015-12-20T21:51:29.415+05:302015-12-20T21:51:29.415+05:30மனநிலை பாதிக்க பட்ட ஒரு பெரியவரை தங்கள் தலைவராக ஏற...மனநிலை பாதிக்க பட்ட ஒரு பெரியவரை தங்கள் தலைவராக ஏற்றுக் கொள்வதென்பது மிகப் பெரிய விஷயம்...௨ங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.... <br />ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால், பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை சரிப்பட்டுப்போகும். உண்மையான சமரசம் தோன்றி விடும். பிறகு கஷ்டமே இருக்காது.<br />- "தந்தை பெரியாரின் அறிவுரை 100' என்ற நூலிலிருந்து.<br />மரியாதைக்குறிய அடிவருடிகளே! பெரியாரின் புகழ் பாடுவதற்கு முன், இந்த அறிவுரையை பின்பற்றும் பெரியாரின் அடிவருடிகளா நீங்கள்? என்பதை தெளிவுபடுத்தவும்...vrkumar18https://www.blogger.com/profile/11365394081233148373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-75719062886118971102015-03-18T04:56:26.601+05:302015-03-18T04:56:26.601+05:30வணக்கம்
இன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமு...வணக்கம்<br /> இன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ<br />http://blogintamil.blogspot.com/2015/03/blog-post_18.html?showComment=1426634644356#c423202049139672746<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-27308618901182687632014-10-15T21:27:32.587+05:302014-10-15T21:27:32.587+05:30ஐயோ! அப்படியெல்லாம் இல்லை அம்மணி! தொடக்கத்திலேயே இ...ஐயோ! அப்படியெல்லாம் இல்லை அம்மணி! தொடக்கத்திலேயே இருப்பதைப் படிப்பதை விட, நல்ல தலைப்பாகத் தேர்ந்தெடுத்துப் படிக்க விரும்பினேன். முகப்புப் பக்கத்தில் உங்கள் கவிதை படித்தபொழுது அதன் முடிவில், லிங்க்வித்-இன்னின் பரிந்துரையில் இந்தத் தலைப்பைப் பார்த்தேன். நீங்கள் பெரியாரியலாளர் என்பதை ஏற்கெனவே அறிந்திருந்ததால், பெரியார் பற்றி நீங்கள் என்ன எழுதியிருப்பீர்கள் எனப் பார்க்கும் ஆர்வத்தில் இதைப் படித்தேன், வேறொன்றுமில்லை.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-88705027891614520562014-10-15T20:38:55.540+05:302014-10-15T20:38:55.540+05:30ஒரு ஆர்வத்தில் கேட்கிறேன் சகோ. 126 பதிவுகளில் இந்த...ஒரு ஆர்வத்தில் கேட்கிறேன் சகோ. 126 பதிவுகளில் இந்த பதிவை எப்படி கண்டுபிடித்தீர்கள்!!! ஒரு வேளை பல பதிவுகள் கடந்து இதுதான் கொஞ்சம் நல்ல இருந்ததா??மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-43210541702712110382014-10-15T13:22:06.736+05:302014-10-15T13:22:06.736+05:30//கணினி பழுது நீங்கியவுடன் வாக்கு தந்தபடி வந்தமைக்...//கணினி பழுது நீங்கியவுடன் வாக்கு தந்தபடி வந்தமைக்கு மிக்க நன்றி சகோ// - :-))இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-77730796520229131502014-10-15T13:21:40.120+05:302014-10-15T13:21:40.120+05:30அப்படி நாகரிகமின்றி விமரிசிப்பவர்கள் சிலராக இருந்த...அப்படி நாகரிகமின்றி விமரிசிப்பவர்கள் சிலராக இருந்தால் புறந்தள்ளலாம். ஆனால், நாட்டில் பெரும்பான்மையானோர் இன்று பெரியாரைப் பற்றித் தவறாகத்தான் புரிந்து கொண்டுள்ளனர்; விமரிசிக்கின்றனர். நாகரிகமோ இல்லையோ, ஆக மொத்தத்தில், அரைகுறையாகத் தெரிந்து கொண்டு முன்வைக்கப்படுபவை என்பதால் அவற்றைப் படிக்கும்பொழுதெல்லாம் சீற்றம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-62772499344330297472014-10-14T21:56:16.068+05:302014-10-14T21:56:16.068+05:30விமர்சனங்கள் தர்க்கரீதியாக இருக்கும் போது வரவேற்கவ...விமர்சனங்கள் தர்க்கரீதியாக இருக்கும் போது வரவேற்கவேண்டும் தான், ஆனால் அநாகரீகமான விமர்சனங்களை நாம் புறந்தள்ளதான் வேண்டும் சகோ! கணினி பழுது நீங்கியவுடன் வாக்கு தந்தபடி வந்தமைக்கு மிக்க நன்றி சகோ:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-26155617461228617842014-10-14T19:54:55.814+05:302014-10-14T19:54:55.814+05:30இன்று மாலைதான் என் கணினிக் கோளாறு சரியானது. நான் க...இன்று மாலைதான் என் கணினிக் கோளாறு சரியானது. நான் கூறியபடியே, இதோ உடனே உங்கள் தளத்துக்கு வந்துவிட்டேன். மகிழ்ச்சிதானே?!<br /><br />என்றும் அன்புடன் உங்கள்:<br />~~இ.பு.ஞானப்பிரகாசன்இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-60446633988882250682014-10-14T19:53:24.304+05:302014-10-14T19:53:24.304+05:30//புதைத்து விட்டு, வழிபடும் மரபினர் நாம்
அதனால்தான...//புதைத்து விட்டு, வழிபடும் மரபினர் நாம்<br />அதனால்தான் கொள்கைகளை புதைத்துவிட்டு<br />வகுத்தவர்களை வழிபடுகிறோம்!!// - தூள்!!<br /><br />பெரியார் பற்றிய உங்களுடைய இந்தப் பதிவு இன்றைய தமிழ் உலகிற்குத் தேவையான ஒன்று! "இன்றைய அரசியலாளர்களை விட, இளைஞர்களிடம் பெரியாரைப் பற்றிச் சரியான புரிதல் இருப்பதாகத் தோன்றுகிறது" என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் இதை முற்றிலும் மறுக்கிறேன். சமூக வலைத்தளங்களில் இன்று 'பெரியார்' எனும் சொல்லைக் கூட வெளியிட முடிவதில்லை. உடனே கூட்டம் கூட்டமாக வந்து கீழ்த்தரமான வார்த்தைகளால் அவரை விமரிசிக்கிறார்கள். அவர் தமிழர் இல்லை என்கிறார்கள், தமிழையும் தமிழர்களையும் வெறுத்தார் என்கிறார்கள், தமிழர்களை அழிப்பதற்காகத்தான் அவர் திராவிடம் எனும் கோட்பாட்டையே உருவாக்கினார் என்கிறார்கள், இன்னும் என்னென்னவோ...<br /><br />கடவுளையே விமர்சித்தவர் பெரியார். அவரும் விமரிசனத்துக்கு உட்பட்டவரே என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், பெரியார் பற்றிய தமிழ் உலகின் இன்றைய விமரிசனங்கள் உண்மையில் விமரிசனங்களாக இல்லை; தவறான தகவல்களின் அடிப்படையில் எழுந்த தவறான கருத்தாக்கத்தின் விளைவுகளே அவை. எனவேதான், இன்றைய சூழ்நிலையில் பெரியார் பற்றிய இந்தப் பதிவு தேவையானது என்கிறேன்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-82963378444284416342014-09-20T22:49:34.830+05:302014-09-20T22:49:34.830+05:30பெரியார் பிறந்த நாள் சிறப்பு பதிவு!!:))பெரியார் பிறந்த நாள் சிறப்பு பதிவு!!:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-39337528492476859682014-09-20T22:49:05.500+05:302014-09-20T22:49:05.500+05:30நன்றி டியர்!!நன்றி டியர்!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-4881559147414382392014-09-20T22:46:50.658+05:302014-09-20T22:46:50.658+05:30பெரியார் இல்லையெனில் இன்றைய ஓரளவேனும் சாதி பாரா தம...பெரியார் இல்லையெனில் இன்றைய ஓரளவேனும் சாதி பாரா தமிழகம் இருந்திருக்காது....உண்மை தான் சகாஸ்!<br />அவரது பிறந்த நாளுக்குத் தங்கள் பதிவு ஒரு மைல் கல்.** பாண்டியன் சகோவிற்கு சொன்னதையே சொல்கிறேன் சகாஸ் !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-43636920391137963382014-09-20T22:44:24.015+05:302014-09-20T22:44:24.015+05:30மிக்க நன்றி அண்ணா!மிக்க நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-7454779729617248412014-09-20T22:43:15.923+05:302014-09-20T22:43:15.923+05:30அண்ணா!
நெடு நாளுக்குப்பின் வந்திருகிறீர்கள்!!! நலம...அண்ணா!<br />நெடு நாளுக்குப்பின் வந்திருகிறீர்கள்!!! நலம் தானே அண்ணா!<br />அருமையான குறும்பா .இன்றைய நிலையை இதைவிட சிறப்பாக சொல்லமுடியாது.** நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-71303678783818762972014-09-20T22:41:52.276+05:302014-09-20T22:41:52.276+05:30மிக்க நன்றி சகோ!மிக்க நன்றி சகோ!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-63710639682819824602014-09-20T22:41:18.713+05:302014-09-20T22:41:18.713+05:30மிக்க நன்றி அய்யா!மிக்க நன்றி அய்யா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-66355106191716031532014-09-20T22:40:56.604+05:302014-09-20T22:40:56.604+05:30மிக்க நன்றி தோழி!மிக்க நன்றி தோழி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-76299623937733184272014-09-20T22:40:36.189+05:302014-09-20T22:40:36.189+05:30ஆம் சகோ! உண்மைதான்:))ஆம் சகோ! உண்மைதான்:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-1098977959846537362014-09-20T22:40:07.555+05:302014-09-20T22:40:07.555+05:30அண்ணா!
தாங்கள் வழிகாட்டியாக இருக்க எங்களுக்கு என்ன...அண்ணா!<br />தாங்கள் வழிகாட்டியாக இருக்க எங்களுக்கு என்ன கவலை!! வாருங்கள் அண்ணா சேர்ந்தே பயணிப்போம்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-59741663767848874072014-09-20T22:37:11.026+05:302014-09-20T22:37:11.026+05:30இரண்டு தமிழ் நதிகள் இங்கு சங்கமித்திருப்பாதே என் ப...இரண்டு தமிழ் நதிகள் இங்கு சங்கமித்திருப்பாதே என் பெரும்பேறு!!!! இருவரும் என்னை மன்னியுங்கள் என்னால் உடனடியாக பின்னூட்டம் இடமுடியவில்லை. ஆனால் தோழி கிரேஸ் சொன்னது போல் மீண்டும் மீண்டும் படித்தால் தான் கரைசெரமுடியும் போல இந்த சிறுமிக்கு ஆழமாய் இருக்கிறது தங்கள் இருவரின் பின்னூட்டம். எத்தனை எத்தனை அதிசயிக்கத்தக்க குறிப்புகள்!!!! மிக்க நன்றி அண்ணன்களே:)))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com