ஒரு மிட்டாய்க்கு
ஒரு எச்சில் முத்தம்
உயரே கிடக்கும் பொம்மையை எடுக்க
எப்போதேனும் ஒரு செல்ல கடி -என
அவள் சின்ன பேரங்களில்
லாலிபாப்பை விட்டுத்தரும்
பெரும் லாபங்கள் -கேட்காமலே வாய்க்கும்
என் விழியோரம் நீர் நிறையும் கணங்களில் !
கஸ்தூரி
மழை தூறத் தொடங்கியதும்
நினைவுக்கு வரும்
மொட்டை மாடி வடகம்
கொடியில் காயும் துணிகள்
சாத்தபடாத சாளரங்கள்
துண்டிக்க வேண்டிய
கேபிள் வயர் !
மறந்து போனது ஒன்றைத்தான்
கற்பனை ஊற்றெடுக்க
கவிதை புனையும் கலை !
கஸ்தூரி