உன் ஆசை என்ன என ஒருபோதும் நம் பெற்றோர் கேட்பதில்லை. அவர்கள் நம் ஆசைகளை தெரிந்தே வைத்திருப்பார்கள். நம் வாழ்கைத்துணையும் கேட்பதில்லை. அவர்கள் நமக்குத் தெரியாமல், அதை கண்டுபிடித்து நமக்கு வியப்பை தர விரும்புவார்கள். ஆனால் நான் சிறுவயதில் படித்த கதைகளில் தேவதைகள் திடீர் என தோன்றி அப்படி கேட்டதுண்டு. வளர்ந்த பின் தான் தெரிந்ததெனக்கு தோழிகள் தான் தேவதைகள் என்று. இதோ அப்படி ஒரு தேவதை என்னிடம் கேட்டிருக்கிறது "உங்க ஆசை என்ன மைதிலி டியர்?"
