விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 13 ஜூலை, 2019
வசந்தமாளிகை - திரைவிமர்சனம்
கொஞ்சம் நாட்களுக்கு முன் சகஆசிரியத்தோழி ஒருவர் வித்யாசமாய் ட்ரீட் கொடுக்க எண்ணி வசந்தமாளிகை படத்துக்கு எங்கள் குழுவை அழைத்துச் சென்றார். அந்த டீமிலேயே நான் மட்டும் தான் ஜூனியர். கே டிவியில், பின் மதியங்களை அப்பத்தா, தாத்தாவோடு கழித்த நினைவில் நானும் கிளம்பினேன்.
நான் சிவாஜியை கதாநாயகனாக பெரியதிரையில் பார்த்த முதல் அனுபவம். ரொம்ப யோசித்தும் அவரை அப்பா, தாத்தாவாகக்கூட பெரியதிரையில் பார்த்த நினைவில்லை. படம் தொடங்கிய சில நிமிடங்கள் அஞ்சு ரூபாய் வாங்கிட்டு ஐம்பது ரூபாய்க்கு நடிக்கிறாரே என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நேரம் செல்லச்செல்ல அதிலும் குறிப்பாக காதல் வசப்பட்டபின், என்ன ஒரு நடிப்பு. இதயம் இருக்கிறதே அத ஒருதர்க்கு கொடுகிறவரை ரொம்ப விசாலமா இருக்கும், ஆனா கொடுத்த பின்னாடி ரொம்ப சுருங்கிப் போயிடும் என காதல் பேசும் போதும் சரி, பெரியவங்க சம்பாதிச்சதெல்லாம் பாவப் பணம்ன அதை குடிச்சுத்தான் அழிக்கனும் என காலை வாரும்போதும் சரி அப்படி ஒரு துள்ளல். லத்தா எனும் சிவாஜியின் அந்த அழைப்பு காதல் காட்டும் கண்ணாடி. அதற்கு முன் அந்த கண்ணாடி அறையெல்லாம் டம்மி தான்.
ரப்னே பனாதி ஜோடி என்றொரு ஷாருக் படம் ஷாருக்கும் அனுஷ்கா ஷர்மாவும் துஜ்மே ரப் திக்தாகே என்றொரு பாடல் பெரியவள் ரிப்பீட் மோடில் கேட்பாள். என்னை பார்க்க சொல்லி அவள் நச்சரிக்க, அவள் ஷாருக்கையும் அனுஸையும் பார்த்துக் கொண்டிருக்க, நான் சுற்றி நின்று ஆடிய குட்டீஸில் ஒன்று ஸ்டெப்ஸ் மாற்றிவிட்ட அருகே இருக்கும் சுட்டி அவளை அவசரமாய் திருத்துவதை சுட்டிக்காட்டி ரசித்தேன். சிவகார்த்திகேயன் உன்னவிட்டா யாரும் எனக்கில்ல என உருகும் பாடலில் சமந்தா தோளில் கைவைக்கயில் டைமிங் மிஸ் ஆகும். இப்படி தான் அம்மாவிடம் சூழுரைத்தபடி சிவாஜி ரிவர்சிலேயே வரும் சீனில் பின்னால் இருக்கும் ஸ்டூலில் தட்டி விழப்போகும் நிமிடத்திற்காக காத்திருந்தேன். குறைந்தபட்சம் அதை தடுமாற்றமாக அவர் சமாளிப்பாரோ என யோதித்தபடி இருக்க, அவரோ மிக இயல்பாய் நகர்த்து செம பல்பு கொடுத்தார். எத்தனை டேக்கில் எடுத்திருந்தாலும், சிறு தன்னுணர்வையும் வெளிப்படுத்தாது அவர் நகர்ந்த இடத்தில் நிஐமாவே நிறுவியிருக்கிறார் நடிகர்திலகமென்று. கணவனே கண்கண்ட தெய்வம் காலத்தில் காதலில் தன்மானம் பேசும் வாணிஸ்ரீ பாத்திரம் புதுமை. என் வரையில் வாணி அந்த காலத்து லேடி சூப்பர் ஸ்டார். இருளும் ஒளியும், வாணிராணி படங்களில் அவரது போல்டான நடிப்பை ரொம்ப பிடிக்கும்.
உங்க அக்காவுக்கு ரொம்ப அகம்பாவம் என சிவாஜி குறைபட்டுக்கொள்ளும் போது குஷி படத்தில் விஜய் விஜயகுமாரிடம் அவ அகம்பிடிச்சவ என புலம்புவது நினைவுக்கு வருது.
பிடிக்கலன்னா விலைமாதா இருந்தாலும் தொடக்கூடாது எனும் வசனத்தை அந்த காலத்திலேயே வைத்த இயக்குனருக்கு ஒரு பூச்செண்டு. வசனங்கள் கூகிலிட வைத்தன. பாலமுருகனின் வசனங்கள் படத்தில் ஒரு முக்கியத்தூண். ஏன் ஏன் ஏன் பாடல் பலரையும் தனைமறந்து தாளமிட வைத்தது, எங்கள் குழுவில் சற்று இறுக்கமான அந்த சீனியர் உட்பட. ஆடை பலவும் இன்றும் ட்ரென்டாகும் ரசனையோடு இருந்தன. அப்புறம் சொல்ல மறந்துட்டேனே எங்க காலத்திலே எல்லாம் இப்படி இல்ல. நகைச்சுவைன சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும்னு வசனம் பேசிய அந்த பெருசுகளை தேடிக்கிட்டிருக்கேன். வி.கே.ராமசாமியும், நாகேஷும் இணைந்து வரும் காட்சிகள் எல்லாம் கஞ்சா கருப்பு ரகம். எங்க பட்டாளத்தை தாண்டி ஒரு மூத்த தமிழ்குடிமகன் நான் மனக்குரலில் கொடுக்க நினைத்த கமெண்டுகளையும் சேர்த்து குரல் கொடுத்துக்கொண்டிருந்தார். என்ன அந்த காமெடி சீசின்ல் அவர் ரவுசு தாங்க முடியல. மொத்ததில் மாரல் ஆப் தி ஸ்டோரி இஸ் "என்னை மன்னிச்சுக்கோங்க பாஸூ, திமிங்கலத்தை டீவில பார்த்து இம்புட்டுத்தான்னு நினைச்சு என் தப்பு தான்" என சிவாஜியிடம் மானசீகமாய் மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)