காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 ஏப்ரல், 2020

காணாமல் போன கவிதைகள்!

 கறுப்புநிறத்து
இதயவடிவ பலூன் ஒன்றை
மணிக்கட்டில் கட்டியபடி
சென்று கொண்டிருந்தவனுக்கு  அதிகபட்சம் பதினாறு வயதிருக்கும்

வியாழன், 25 டிசம்பர், 2014

மைக்கூ-5






காலாவதியான,பயன்பாட்டில் இருக்கிற
இனி வாங்கபோகிற என் பூட்டுகளுக்கெல்லாம்
உன்னிடம்  கள்ளசாவி உண்டு என்றறியாமல்
மீண்டும் மீண்டும் பூட்டிக்கொள்கிறேன் நான்


உன் மௌனக் குமிழ் மோதி
சிதைந்துபோகிறது என்
சொற்கோபுரங்கள்

உன் சின்ன புன்னகையை
சிறை செய்யத் தடுமாறும் மனம்
சர்க்கரை சுமந்த சிற்றெறும்பாய்





வயதை விலையாய் கொடுத்தபின்
ஈட்டிய தாள்களிலும் மதிப்பற்று
தொடர்கிறது பூஜியங்கள்.


பயணங்களில், சந்திப்புக்கு சந்திப்பு
சோதனைக்குள்ளாகிறது என் ஈகை
ரயில் யாசகர்கள்


பட்டாம்பூச்சிகளின் சிறகுபிய்த்து, காலொடித்து
பால்யம் கடந்தவர்களுக்குத்தான் வாய்க்குமோ
பள்ளிகூடங்களில் குண்டுவைக்கும் மனம்



குறும்பா -4




செவ்வாய், 14 அக்டோபர், 2014

வெற்றுத்தாள் புன்னகை








உனக்கான கவிதைகளில்
ஒரு பந்தயக்குதிரையாகவும்
உன்னோடான தருணங்களில்
நொண்டிக்குதிரையாகவும் என் சொற்கள்

வெள்ளி, 3 அக்டோபர், 2014

கைப்பை -3





 டைரி 

                  வரவர நிறைக்குட்டி பேச்சில்  நகைச்சுவை ஊற்றெடுக்கிறது. ஒரு செருப்புக்கடையை  கடந்த போது சொன்னாள் "அம்மா, இந்த செப்பல் கடைகாரர் நல்ல புத்திசாலிதான். நான் "ஏன்டா அப்டி சொல்லுற?" பாருங்கம்மா கோவிலுக்கு பக்கத்துல வைச்சுருக்காரே! அங்க செப்பலை தொலைச்சவங்க, இங்க வாங்கிக்குவாங்க இல்ல".

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

குறும்பா _3








யாரோ போல தான் நீயும் -என
நான் கருதும் நாளில்- புத்தனுக்கு
புதிய போட்டியாக  இருப்பேன் நான்

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

உனக்கும் மழை என்று பேர்!







உன் மச்சமாக முடியாததால்
தன் எச்ச நொடிகளை புனிதமாக்க
உன் இதழோரம் சிந்திமடிகிறது - மழைத்துளி!!

சனி, 9 ஆகஸ்ட், 2014

விட்டுவிடு வீழ்ந்துவிட்டேன்- பாகம் 2






குருதி தொட்டும், எழுத்தில் அடங்காது
என்னை சூழழ்ந்து கிடக்கும் உனக்கான சொற்களை
மொழிபெயர்க்கும் வழியறியாது திகைத்து நிற்கும் - என் இரவுகள்.

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

செவ்வாய், 29 ஜூலை, 2014

ஆறாவது படிக்கிற பையன் லவ் பண்ணினா தப்பா?

          




        அவன் அந்த சின்ன வயதில் எப்படி இவ்வளவு பெரிய மனுசத்தனத்தோடு இருக்கிறான் என வியப்பாய் இருக்கும். சத்துணவு உணமாட்டான். சீருடை தரமாட்டோம் என ஆசிரியர்கள் கோபம் கொண்டால் அமைதியாய் தலையை குனிந்து கொள்வான். மற்றவர்கள் போல நீயும் வாங்கி முடிந்த அளவு சாப்பிட்டுவிட்டு கொட்டவேண்டியது தானே? ஏன் திட்டு வாங்குற? என கேட்டால், சாப்பாட்டை வீணாக்குவது பெரிய பாவம். உணவை மதிக்காத வேலையை நான் செய்யமாட்டேன் என்று சொல்லாலே எனக்கும் ஒரு அறைகொடுத்தான். ஆனால் அவனது தோரணையே அவனுக்கு சில பிரச்சனைகளை தேடித்தந்தது. அவன் மீது சில டீச்சர்கள் மட்டும் எரிச்சலில் இருந்தார்கள்.
       

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

குறும்பா-ii



சித்திரக்கூடத்தை ரசிக்க வருபவனும்
அதை பராமரித்து சலித்தவனுமாய்-பலவேளைகளில்
திருமணத்திற்கு முன்னும் பின்னுமான காதல் !  
-----------------------------------------------------------------------------

புதைத்து விட்டு, வழிபடும் மரபினர் நாம்
அதனால்தான் கொள்கைகளை புதைத்துவிட்டு
வகுத்தவர்களை வழிபடுகிறோம் !!
 ------------------------------------------------------------------------------

முட்டாள் என்று பெயரெடுத்ததைவிட வலிமிகுந்தது
முட்டாளாய் தான் ஆக்கப்பட்டிருக்கிறோம்
என்று உணரும் தருணம் .
 ----------------------------------------------------------------------------------------

தெருநாய்கள் மீது கல் எறிவோர் கவனத்திற்கு
அவை மட்டும் இல்லை என்றால்
குனிந்து கல் எடுக்க தகுதியற்றிருக்கும் உங்கள் தெருக்கள்!
 ---------------------------------------------------------------------------------------------------

முன்பு புத்தம் சரணம்
பின்பு யுத்தம் மரணம்
என்று ரத்தம் ரணம்
புத்தர் என்றோ ஜென் நிலையடைந்துவிட்டார்
 ----------------------------------------------------------------------------------------------------

உன் கல்கண்டுப்புன்னகையை
கொட்டிவைக்கும் இடமா?
உன் கன்னக்குழி

வியாழன், 6 மார்ச், 2014

காலம் விரைகிறது, காதலே வழிவிடு!

முடி கலைக்க நுழைந்த விரல்கள்
மூளை கலைத்து விட்டனவா ?
கொதிக்காத உலையும்
கொடும்பசியுமாய் வாடும் ஏழ்மை கண்டு
கொதித்துப்போய் எடுத்த பேனாவால்
கொட்டிய மழையை பாடுகிறேன் சிலிர்ப்பாய்!

வியாழன், 12 டிசம்பர், 2013

நிலோ காத்திருக்கிறாள்

                    { இந்த கதை ஆனந்தஜோதி சென்ற ஆண்டு நடத்திய சிறுகதை போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசு வாங்கித்தந்தது .}
                                                                                                                                                                                                                               
                                                                                                                                                                        சுற்றம் மறந்து பார்வை மாநாடு நடத்திக் கொண்டிருந்த கிரேக்க காதலர்களின் கோர்த்த விரல்களுக்கிடையே இருந்த இதய வடிவ கடிகாரத்தில் இரண்டு அம்புகளும், ஒன்றையொன்று முத்தமிட்டு மணி 12 என்றது. நிலோபர் செல்போனை எடுத்து மணி பார்த்தாள். அதுவும் மேசையில் இருந்த கிரேக்க கடிகாரம் சொன்னதைத்தான் வழிமொழிந்தது. நிலோ அந்தக் கடிகாரத்தில் ஒருபோதும் மணி பார்ப்பதில்லை. ரகு அதை பரிசளித்த நாளாய் அந்தக் காதலர்களை ரகுவும் நிலோவுமாக மாற்றும் கற்பனையிலேயே ஆழ்ந்துவிடுகிறாள்.


செவ்வாய், 1 அக்டோபர், 2013

வியாழன், 25 ஏப்ரல், 2013

சவ்வுமிட்டாய்

உள்ளங்கையில் ஒட்டிய
சவ்வு மிட்டாய் போல்
உரிக்கவே முடியவில்லை
உன்  நினைவுகளை !
நாவடியில் சக்கரையாய்
கரைந்தபடி உன் பெயர் !
தொண்டையை அடைக்கும்
உன்  நினைவுகளை
விழுங்குகிறேன்
காதல் குடித்து !
                               கஸ்தூரி
Add caption