நேற்று என் அன்பு இளவல் நிஸாரின் உறவினர் வீட்டில் திருமணம். பொங்கல் அன்று என் தம்பி சரத்தும், நிஸாரும் அழைப்பு தந்து அவசியம் வரணும் என்று கூறி கிளம்பியபின், மதி அழைத்தாள் "அக்கா! நீ நிக்காஹ் க்கு போகப்போற தானே?." நல்லா ரைமிங்கா தான் கேட்கிற. பின்ன போகாம இருக்கமுடியுமா? நம்ம நிஸார் வீட்டு கல்யாணம் ஆச்சே" என சொல்லும்போதே சந்தானத்தின் பஸீர் பாய் கல்யாணம் ஜோக் நினைவு வந்துவிட, நான் சொல்லாமலே அவளுக்கு அந்த ஜோக் நினைவு வந்துடுச்சுபோல.