பதிவர் விழா கட்டுரைப்போட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவர் விழா கட்டுரைப்போட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 2 அக்டோபர், 2015

இது நம்ம கோட்டை!!

           மன்னர்களுக்குத் தான் கோட்டையா என்ன?? நம்ம நட்புக்கும் கோட்டை உண்டு. நாம் எழுதும் தமிழுக்குக் கோட்டை உண்டு. நம் தமிழ்ப் பதிவுலகிற்கு ஒரு கோட்டை உண்டு.

புதன், 30 செப்டம்பர், 2015

துறைதோறும் இணையத்தமிழ் !!





   பிழையின்றி பிழைக்கின்ற உயிர் அனைத்தும் புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றலை,பிழையின்றித் தொடர்கின்றன! கூட்டுப்புழு வண்ணத்துப்பூச்சியாய் புதுப்பித்துக்கொள்கிறது! புதுப்பித்துக்கொண்ட குரங்கினம் தான் இன்று உலகையே நொடிக்குநொடி புதுப்பிக்கும் இனமாய் வளர்ந்திருக்கிறது. என்றும் எழில் குன்றா, இளைய தமிழுக்காக இந்த வித்தை தெரியாது?! நான்காம் தமிழாய் இணையத்தமிழும், ஆறாம் திணையாய் இணையமும் ஒருங்கே வளர்வது உலகறிந்ததே! சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என முரசுகொட்டிய முண்டாசுக்கவிஞனின் பாதையில் வீறுநடைபோட்டு சீறுகின்ற நம் தமிழ்ப் பட்டாளம் திசைதோறும் விரைந்து தொகுத்த, படைத்த செல்வக்களஞ்சியங்கள் உங்கள் பார்வைக்கு!

வியாழன், 17 செப்டம்பர், 2015

சிற்பமே உன்னை செதுக்கிக்கொள்!

 

                 அது காலைநேர சாலை. உங்கள் அகநுட்ப விழியால் பார்க்கமுடிந்தால் புலப்படக்கூடும் ராக்கெட்டுகளை போல சைலன்சர்களில் புகையோடு நெருப்பும் கக்கும் வாகனங்களை. அந்த சாலையில் ஒரு ஆண் தன்னை முந்திச்செல்கையில், அவர் பணி, அவர் அவசரம் என பெரும்போக்காய் விட்டுவிடும் ஆண்கள், முந்தியது பெண் என்றால் அவளுக்கு ஒரு அடியேனும் முன்னே செல்லும்வரை அமைதியிழந்து போகிறார்கள். ஒரு சாலையில் ஒரு நொடிகூட தனக்கு முன்னே ஒரு பெண் செல்ல அனுமதிக்காத எத்தனையோ ஆண் ஈகோக்களை கடந்தே விரைந்துகொண்டிருக்கிறது  எங்கள் வண்டிகள்!