மழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 செப்டம்பர், 2015

மைக்கூ!! -6


நடுங்குகிற தேநீர்க் கோப்பையை
இறுகப் பற்றுகிறது
முதிர்ந்த விரல்கள்!
----------------------

திங்கள், 20 அக்டோபர், 2014

நிறையத்துடிக்கும் தேநீர் கோப்பை!




விரலிடுக்கில் வழிந்துவிடப்போகும்
கடைசித்துளியை பத்திரப்படுத்தும்
எத்தெனங்களோடு சொன்னாய்
கீப்-இன்-டச்!!

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

குறும்பா _3








யாரோ போல தான் நீயும் -என
நான் கருதும் நாளில்- புத்தனுக்கு
புதிய போட்டியாக  இருப்பேன் நான்

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

உனக்கும் மழை என்று பேர்!







உன் மச்சமாக முடியாததால்
தன் எச்ச நொடிகளை புனிதமாக்க
உன் இதழோரம் சிந்திமடிகிறது - மழைத்துளி!!

புதன், 12 பிப்ரவரி, 2014

பெருநகர மழை நாட்கள்!


சில சமயங்களில் இப்படி நிகழ்ந்து விடுவதுண்டு. பெருநகர மழை என்றொரு வார்த்தை என் புத்திக்குள் இருந்து கொண்டு என் எல்லா கவிதைகளில்
தலை நீட்ட  தொடங்கியது சில காலமாய். பின் அதன் தொந்தரவு தாங்காது அதற்காகவே ஏதேனும் எழுதிவிடலாம் என தோன்றிய நாளில், காத்திருந்த தென்றலாய் பேனாவை தழுவிது இக்கவிதை!?


கை நீட்டி களித்திருக்க
உழவர் பெற்ற மக்கள் இல்லை
காகிதத்தில் கப்பல் விட
முற்றம் வைத்த வீடு இல்லை
ஓய்ந்தபின்பு பார்த்திருக்க
ஒளிர்பச்சை இலைகள் இல்லை


சாலை எங்கும் நீர் பெருக
சாக்கடையும் அடைத்துக்கொள்ள
வேலைநாளில் வந்துவிட்ட 
வேண்டாத விருந்தினர் போல்
வெறுப்புக்கும், சலிப்புக்கும்
ஆளாகிறது -பெருநகரில் என்
விருப்ப மழை நாட்கள் !!


மீள்பதிவு தான் மேலும் வருத்தத்துடன்......

வியாழன், 14 நவம்பர், 2013

மழை

மதில் ஏறி கன்னம் வைக்கும் கள்வனாய்
மழைச்சரம் பிடித்துவிண்ணைத் தொட ஆசை