திங்கள், 27 ஜூலை, 2015

வாங்கண்ணா!! வணக்கமண்ணா!

                                   உங்களுக்கும் என்னைப் போல  மழை தொடங்கும் மண்வாசம் பிடிக்குமா? பொழிந்து கொண்டிருக்கையில் தேநீர் பிடிக்குமா? மழை ஓய்ந்தபின் கிளை உலுக்கி நனையப்பிடிக்குமா? புதுப் புத்தகத்தை பிரித்தவுடன் நுகரப்பிடிக்குமா? உச்சி வெயில் ட்ராபிக்கில் அடுத்த வண்டியில் பிஞ்சு கையசைக்கும் பிள்ளை நிலாக்கள் உங்களை ஆற்றுப்படுத்துமா? அப்போ கண்டிப்பா இதுவும் பிடிக்கும்.

வியாழன், 23 ஜூலை, 2015

ஷர்மிலி மிஸ் !!! நீங்க நல்லவங்களா? கெட்டவங்களா?

          "குழந்தையை நீங்க எப்படி அடிக்கலாம் . ஆயிரக்கணக்குல பீஸ் கட்டி படிக்கவைக்கிறது உங்க கிட்ட அடி வாங்கவா?. இன்னும் எந்த காலத்தில இருக்கீங்க  ..." 
சுதனின் கோபத்தை எதிர்பார்க்காத ஷர்மிலி மிஸ்ஸின் முகம் பயத்தில் மாறியது 

சனி, 18 ஜூலை, 2015

பீதி கிளப்புகிறது சாதிவாரி கணக்கெடுப்பு!

                    இந்த சாமியை போல இந்த சாதியையும் வைத்த இடத்தில சத்தமில்லாமல் இருந்துவிட்டால் எனக்கு எந்த சச்சரவும், சங்கடமும் இல்லை தான். (என்ன ஒரே "சா" வா இருக்கே மைதிலி! சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட்டா ஒரே சாவா இருக்குமோன்னு ஒரு டென்ஷன் தான்)

சனி, 11 ஜூலை, 2015

இந்த முறை நான் விட்டுக்கொடுப்பதாக இல்லை.

                                 மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்க விடுவதில்லை. நான் அரசியல் எழுதாமல் சும்மா இருந்தாலும்  மோடிவிடுவதில்லை. மறுபடியும் மொதல்ல இருந்தே எழுதவைக்கிறாரே மோடி:(

செவ்வாய், 30 ஜூன், 2015

கொலையா?? தற்கொலையா??

        பொதுவாக ஒரு மொழி அழியும்போது, அதை பேசும் இனமும் அழிந்துபோகும். அதாவது தமிழ் அழிந்துபோனால், தமிழன் அழிந்து போவான். ஒட்டுமொத்தமாக அந்த இனமே செத்துபோகாது, ஆனால் அடையாளங்கள் அளிக்கப்பட்டு, ஒரு அகதி இனமாய், வேற்றொரு இனத்தோடு ஒண்டி வாழவேண்டியது தான்.