செவ்வாய், 27 அக்டோபர், 2015

பெப்ஸி - உங்கள் குளிர்பானம் எங்கள் நெருப்பை அணைக்காது!


                                               உலகமயமாக்கல்,  நுகர்வோர் கலாச்சாரம் போன்ற வார்த்தைகளை தெரிந்துகொண்ட நாளில் இருந்து விளம்பரங்களின் அழகியலை மீறி அதன் அரசியலையும் புரிந்துகொள்ளும் தெளிவு கைவரப்பெற்றிருக்கிறது. ஆனாலும் என்ன, குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்ற சிந்தனையோடு, பிரபு போல புரட்சி, போராட்டம் என்று இறங்காமல், நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை (எந்த நாலு பேர்?!) என கமல் (போல) கமர்ஷியல்களையும் சகிக்கப் பழகியாயிற்று.

திங்கள், 12 அக்டோபர், 2015

நன்றி!!! நன்றி!!! நன்றி!!!

பதிவர் திருவிழா 2015 மிக சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. முன்னெடுத்து நடத்திய நிலவன் அண்ணா தலைமையிலான புதுகை கணினி தமிழ் ஆசிரியர் சங்கம் பம்பரமாய் சுழன்று விழா வெற்றி பெற உழைத்தது நம் அறிந்ததே! டி.டி அண்ணாவின் உழைப்பு அசாத்தியமானது. 

வெள்ளி, 2 அக்டோபர், 2015

இது நம்ம கோட்டை!!

           மன்னர்களுக்குத் தான் கோட்டையா என்ன?? நம்ம நட்புக்கும் கோட்டை உண்டு. நாம் எழுதும் தமிழுக்குக் கோட்டை உண்டு. நம் தமிழ்ப் பதிவுலகிற்கு ஒரு கோட்டை உண்டு.

வியாழன், 1 அக்டோபர், 2015

புதன், 30 செப்டம்பர், 2015

துறைதோறும் இணையத்தமிழ் !!





   பிழையின்றி பிழைக்கின்ற உயிர் அனைத்தும் புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றலை,பிழையின்றித் தொடர்கின்றன! கூட்டுப்புழு வண்ணத்துப்பூச்சியாய் புதுப்பித்துக்கொள்கிறது! புதுப்பித்துக்கொண்ட குரங்கினம் தான் இன்று உலகையே நொடிக்குநொடி புதுப்பிக்கும் இனமாய் வளர்ந்திருக்கிறது. என்றும் எழில் குன்றா, இளைய தமிழுக்காக இந்த வித்தை தெரியாது?! நான்காம் தமிழாய் இணையத்தமிழும், ஆறாம் திணையாய் இணையமும் ஒருங்கே வளர்வது உலகறிந்ததே! சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என முரசுகொட்டிய முண்டாசுக்கவிஞனின் பாதையில் வீறுநடைபோட்டு சீறுகின்ற நம் தமிழ்ப் பட்டாளம் திசைதோறும் விரைந்து தொகுத்த, படைத்த செல்வக்களஞ்சியங்கள் உங்கள் பார்வைக்கு!