வியாழன், 27 நவம்பர், 2014

இசையின் வாசனை.

           
       
 

                      பழுப்பேறிய ஒரு புகைப்படத்தை பார்ப்பது போல் இருக்கிறது இப்படி பின்னோக்குவது. கோணல் வகிடெடுத்து மெலிசாய் கண்மை தீட்டிய விழி மூடி, தேன்கிண்ணத்தை சொட்டுச்சொட்டாய் பருகிறபடி இருக்கும் அம்மாவின் முகத்தை தொட்டு விலகும் ஒளியை ரசித்த என் ஏழு வயதிற்குள்ளாக தான் துளிர்த்திருக்கவேண்டும் இசையின் மீதான காதல். அப்படி உருகி உருகி என் அம்மா இசை பருகிய அந்த கருவியை உங்களில் எத்தனை பேர் பார்திருபீர்களோ! அது ஒரு சைக்கிளில் பொருத்தக்கூடிய head லைட்டுடன் சேர்ந்த ரேடியோ! P.B.ஸ்ரீநிவாசும், ஜானகியும், சுசிலாவும் காற்றில் சுகந்தம் பரப்பிய இரவுகள் தொலைத்த விடுதி நாட்களை எட்டுவயதில் சபிக்க அந்த ஒரு காரணம் போதுமானதாக  இருந்தது. 

திங்கள், 24 நவம்பர், 2014

தோழியின் விடைபெறல்!

கையசைத்து நீ விடைபெறுகையில்
கடந்து சென்ற பட்டாம்பூச்சியால்
கவிதையாகிறது அந்த நொடி!!

ஞாயிறு, 23 நவம்பர், 2014

கத்தரி கைகள்

   கத்தரிக் கைகளை அவசரமாய் கத்தரிக்காய்கள் என படித்து சமையல் குறிப்புக்காக ஓடிவந்தவங்க அப்படியே எஸ்கேப் ஆகிடுங்க, அப்புறம் சேதாரத்துக்கு நான் பொறுப்பு இல்லை.
   
          

வியாழன், 20 நவம்பர், 2014

நாசாவிலுமா தூங்குமூஞ்சி ஆபிசர் !!

    

  ஒரு ஆண்டுக்கு முன் ரிப்போர்டரில் தூங்கி கொண்டே நாசாவில் சம்பளம் வாங்க ஆசையா?? என்றொரு தலைப்பில் ஒரு துணுக்கு ஒன்று படித்தேன். நம்ம ஊர்ஆபிஸ் ஜோக் கள் எல்லாம் நினைவுக்கு வந்தன.

ஞாயிறு, 16 நவம்பர், 2014

கனவில் வந்த காந்தி 4

           

           அதென்ன காந்தி நாலு?? ஒன்னுமில்லங்க கில்லர்ஜி அண்ணா ஒரு பதிவு போட்டிருந்தார் கனவில் வந்த காந்தி 1. படிச்சுக்கிட்டு வரும்போதே ஒருவேளை காந்தி என்னையும் கேள்வி கேட்டுவிடுவாரோ என சிறுமூளை எச்சரிக்க, ஓடி போய் பார்த்தேன். தொடர் பதிவு தான் என்ற போதும் பெரிய மனசு பண்ணி, அண்ணா என்னை அந்த பதிவில் சேர்க்கவில்லை. அவர்க்கு அங்கேயே நன்றி சொல்லிவிட்டு, ஒரு fake லீவ் லெட்டரை சமர்ப்பித்துவிட்டு வந்தேன். அந்த லெட்டரை  தில்லையகம் சகாஸ் நம்பிய போதும் ........விதி வலியது பாருங்க. கரந்தை அண்ணா நம்பல.  இதுல லிங்கி ருக்கார்.
   

வெள்ளி, 14 நவம்பர், 2014

நாங்க எல்லாம் அப்பவே அப்புடி!




                       அப்போ ஒன்பதாம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்தேன். (போய்க்கிட்டிருத்தேன் னு சொல்லு ஆனா படிச்சுக்கிட்டுன்னு மட்டும். இப்போவே ஆரம்பிச்சுட்டீங்களா?? ஒ! அது என் மைன்ட் வாய்ஸா). எங்க இங்கிலிஷ் சார்

ஞாயிறு, 9 நவம்பர், 2014

இதுக்கு என்ன பதில் சொல்லட்டும் மோடி சாப்??

  மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று அதை விடுவதில் என்கிறார் மாவோ. பாருங்க நான் அரசியல் எழுதவேண்டாம் னு நினைகிறேன். மோடிவிட மாட்டேன்கிறார்.

வெள்ளி, 7 நவம்பர், 2014

எனது வானுக்குக் கீழே!

 ஒரு ஒப்பந்தம்





              நண்பர்களே! நம்மில் பலருக்கும் வாழ்வில் ஏதோ ஒரு பருவத்தில் ஒருமுறையேனும் மேகங்களை நேரம் போவதறியாது பார்த்த அனுபவம் இருக்கும். ஒரே மேகம் ஒவ்வோரு  கண்களுக்கும் வெவ்வேறு வடிவம் காட்டும். பார்த்துக் கொண்டிருப்பவர்கே கூட முந்தைய நொடிக்கும் அடுத்த நொடிக்கும் வடிவம் மாறி வித்தை காட்டி விடும். அது போலவே ஒரு கதை அல்லது பாடல் என்பது அமைந்துவிடுகிறது. அது கொள்கலனின் வடிவம் கொள்ளும் திரவம் போல் அவரவர் மனம் கொடுக்கும் வடிவம் கொள்கிறது. பார்க்கும் எண் ஆறு என்பதும் ஒன்பது என்பதும் அவரவர் நிற்கும் இடத்தை பொறுத்தது தானே.