![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAhJGSP9pGuec8tZWPvUSRt7581c287qiPA5oCXvT-ogxd_Ve-mHONCAYXLsLebKrBKrUd1RTGzKSEkk67__zJar63m48UcJj_CDeytliq2Q4sEUqBLKkyICQ-vzVQNR1OZ1nBclU-r20/s1600/veli-2.jpg)
கண்டுகொண்ட நொடியில்
தாயின் கவனிப்பு
பதினாறு நாட்களும்
பதார்த்தமும் ,மலர்ச்சரமுமாய்
உறவினர் வருகை
நல்லெண்ணெய் ,நாட்டுக்கோழி முட்டை
நாற்றம் பொறுத்து விழுங்காவிட்டால்
நடுக்கம் தரும் அப்பத்தாவின் மிரட்டல்
நிறைவாய் பந்தியும் ,பந்தலுமாய்
நிகழ்ந்தேறிய கணங்களை
நினைக்கையில்
நனைகிறது கண்ணீரால்
பதுங்குகுழியில் பூப்பெய்திய
என் ஈழச்சகோதரிகளின்
சோகம் தாங்கிய கட்டுரை -கஸ்தூரி