ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

குறும்பா-ii



சித்திரக்கூடத்தை ரசிக்க வருபவனும்
அதை பராமரித்து சலித்தவனுமாய்-பலவேளைகளில்
திருமணத்திற்கு முன்னும் பின்னுமான காதல் !  
-----------------------------------------------------------------------------

புதைத்து விட்டு, வழிபடும் மரபினர் நாம்
அதனால்தான் கொள்கைகளை புதைத்துவிட்டு
வகுத்தவர்களை வழிபடுகிறோம் !!
 ------------------------------------------------------------------------------

முட்டாள் என்று பெயரெடுத்ததைவிட வலிமிகுந்தது
முட்டாளாய் தான் ஆக்கப்பட்டிருக்கிறோம்
என்று உணரும் தருணம் .
 ----------------------------------------------------------------------------------------

தெருநாய்கள் மீது கல் எறிவோர் கவனத்திற்கு
அவை மட்டும் இல்லை என்றால்
குனிந்து கல் எடுக்க தகுதியற்றிருக்கும் உங்கள் தெருக்கள்!
 ---------------------------------------------------------------------------------------------------

முன்பு புத்தம் சரணம்
பின்பு யுத்தம் மரணம்
என்று ரத்தம் ரணம்
புத்தர் என்றோ ஜென் நிலையடைந்துவிட்டார்
 ----------------------------------------------------------------------------------------------------

உன் கல்கண்டுப்புன்னகையை
கொட்டிவைக்கும் இடமா?
உன் கன்னக்குழி

சனி, 8 பிப்ரவரி, 2014

விடுமுறை தின சிறப்பு பதிவு

ஒரு நிகழ்ச்சி ;            வெகு நாட்களுக்கு பின் சனிக்கிழமை விடுமுறை.மதியம் நிறைமதிகிட்ட கெஞ்சி, கொஞ்சி, தாஜா பண்ணி கார்டூன் சேனலை