புதன், 31 டிசம்பர், 2014

ஆயகலைகளை அப்டேட் பண்ணுவோமா!! இது கலைச்சரம்

   



        இதோ  2015 வந்துடுச்சு. டெக்னிகலா உலகம் ரொம்ப முன்னேறி  இருக்கு! குழந்தைகள் கூட  இப்போ பாரதி சொன்ன மாதிரி விளையாடாமல், டெம்பிள் ரன், candy crush தான் பண்ணுறாங்க. இன்னும் அந்த பழைய ஆய கலைகள் அறுபத்தி மூன்று தான் என சொல்லமுடியாது இல்லையா... நிறைய கலைகளில் மாற்றங்கள் வந்திருக்கு. புதிதா பல கலைகள் தோன்றிருக்கு. போன பதிவில் food carving பத்தி பார்த்தோம்ல. அது போல இப்போ கலக்குற சில கலைகளை பார்ப்போம்.

திங்கள், 29 டிசம்பர், 2014

கைப்பை-5




     
 நோட் பேட்:

              வீட்டில் வளர்க்கும் செல்லக்கிளிகளுக்கு சாக்லேட் கொடுக்கக்கூடாதாம்.

              நத்தைகளால் மூனுவருடம் தொடர்ந்து தூங்க முடியுமாம்!

              தும்பலின் போது நம்மஇதயம் நின்றுவிட்டு பின் துடிக்குமாம்!

வியாழன், 25 டிசம்பர், 2014

மைக்கூ-5






காலாவதியான,பயன்பாட்டில் இருக்கிற
இனி வாங்கபோகிற என் பூட்டுகளுக்கெல்லாம்
உன்னிடம்  கள்ளசாவி உண்டு என்றறியாமல்
மீண்டும் மீண்டும் பூட்டிக்கொள்கிறேன் நான்


உன் மௌனக் குமிழ் மோதி
சிதைந்துபோகிறது என்
சொற்கோபுரங்கள்

உன் சின்ன புன்னகையை
சிறை செய்யத் தடுமாறும் மனம்
சர்க்கரை சுமந்த சிற்றெறும்பாய்





வயதை விலையாய் கொடுத்தபின்
ஈட்டிய தாள்களிலும் மதிப்பற்று
தொடர்கிறது பூஜியங்கள்.


பயணங்களில், சந்திப்புக்கு சந்திப்பு
சோதனைக்குள்ளாகிறது என் ஈகை
ரயில் யாசகர்கள்


பட்டாம்பூச்சிகளின் சிறகுபிய்த்து, காலொடித்து
பால்யம் கடந்தவர்களுக்குத்தான் வாய்க்குமோ
பள்ளிகூடங்களில் குண்டுவைக்கும் மனம்



குறும்பா -4




செவ்வாய், 23 டிசம்பர், 2014

என் வாசலில்.....


                என்ன இப்படி திடீர்னு கோலம் எல்லாம் அப்புடீன்னு தோணுதா சகோஸ் அண்ட் சகாஸ்???  ஒரு வாரமாஇந்த படந்தான் ஓடிக்கிட்டிருக்கு என அதிகம் பேர் பார்த்த பதிவுகள் பட்டியல் வலப்பக்கம் இருக்கு பார்த்தீர்களா......

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

வின்சியோடு ஒரு நாள்.

        
     
              அதிகாலை குளிர்போல் நடுக்கி எடுத்தது தனிமை உள்ளும்,புறமுமாய். கைகள் நீட்டி சோம்பல் முறிந்தபோது தட்டுபட்ட கைபேசி, f.b செக் செய்யலாம் என்றொரு சின்ன சுவாரஸ்யம் சேர்க்க, எடுத்தபோது ஒன்பது தவறிய அழைப்புகள். தீபாவா??? பேசியேகொல்லப்போகிறாள். ரெண்டுவார்த்தை பேசினாலே நேத்து குடிச்சியா என கண்டுபிடித்துவிடும் ராட்சஸி! சலிப்பின் ஊடே கால் ஹிஸ்டரி நாலுமுறை அம்மா, ஐந்துமுறை ஆகாஸ் என்றது. அவன் ஏமாற்றம் அவனுக்கே அவமானமாய் இருந்தது.சற்றுமுன் வரை தீபாவைப்பற்றி சலிப்பாய்த் தானே நினைத்தான். ஆனால் தீபா அவனை கை கழுவி விட்டாள் என்பதை ஏற்கவே முடியவில்லை. முகப்புத்தகத்திலும் அவனை அன்பிரண்டு செய்து இருந்தாள். வேண்டா வெறுப்பாய் அம்மாவை அழைத்தான். “ஐயா! ராத்திரி தூங்க ரொம்ப நேரமாச்சோ! உடம்பு சுகந்தானே எதற்கும் பதில் சொல்லும் முன் எஜமானுக்கு கணக்குச் சொல்லும் கணக்குப் பிள்ளையாய் வீட்டு நிலவரம், வரவு செலவு, தங்கைகள் படிப்பு என சகலத்தையும் ஒப்புவித்து விட்டு, நேரா நேரத்திற்கு சாப்பிட,  தூங்க எண்ணெய் தேய்த்து குளிக்க, அறிவுறுத்தி போனை விட்டு வைத்து விட்டாள்.

வெள்ளி, 19 டிசம்பர், 2014

அப்பிக்கிடக்கும் வர்க்க வாசனை


டகரப்பாதையில் சிப்பாய் தாண்டி
ராணியின் தலைவாங்கி
கனைப்பொலிஅடங்குகையில்
காணநேர்கிறது வெள்ளை ராஜா
சிறைபட்டு விட்டதை

திங்கள், 15 டிசம்பர், 2014

அப்பாட்டக்கருக்கு ஆங்கிலத்தில் என்ன ? கொஞ்சம் English - PART 10

       வழக்கம் போல பாட ஓய்வு வேளையில் சோறுபோடும் மொழி அறிவை வளர்த்துக்கொள்ளவும், அறிவுக்கு கொஞ்சம் சோறுபோடவும் dictionary யை புரட்டிக்கொண்டிருந்தேன். crow's feet என்றொரு சொல் இருந்தது. காக்கா காலுக்கெல்லாம் வெளக்கமா ?? என சிரித்தபடி இந்த phrase என்ன விளையாட்டு காட்டபோகிறது என்ற ஆவலுடன் படித்தால், இதே போல சில எல்லோருக்கும் தெரிந்த, எனக்கு தெரியாத  bird name phrase களை தொகுக்கலாமே என தோன்றியது!! நீங்களும் பாருங்க

புதன், 10 டிசம்பர், 2014

அந்த இன்னொரு இட்லி யாரோடது!!

          நூடில்ஸ்,பிட்சா என  கலக்கிக்கொண்டிருந்த டீன் மொழியில் இப்போ இட்லி talk பரவி இருக்கு. நம்ம விஜய் இட்லியை வைத்து கம்யூனிசத்தை விளக்கினாரும் விளக்கினார். f.b எல்லாம் இப்போ இட்லி தான். குஷ்பு காங்கிரசில் இணைந்தபோது வந்த மற்றொரு இற்றை "பாழாய் போன சமூகம் ஒண்ணா இருந்த குஷ்புவையும் இட்லியையும் பிரித்து, குஷ்புவை காங்கிரசிலும், இட்லியை கம்யுனிஸ்ட் கட்சியிலும் சேர்த்துவிட்டது! 
       

திங்கள், 8 டிசம்பர், 2014

முருங்கை பூத்திருக்கு:)






கரும்பச்சைக் கூடாக  கண்பறித்த தும்பி  
கவனிக்கச் செய்தபின் தான்பார்த்தேன்-கொத்தாய் 
மலர்ந்திருக்கும் இம்முருங்கை காய்காய்க்க   சுற்றம் 
மகரந்தச் சூழ்த்தரிக்கும் நட்பு!!

திங்கள், 1 டிசம்பர், 2014

லிங்கா ப்ரோமோ-கே.எஸ்.குமார்-டி.அர்.பி கண்ணீர்!

                                      ரஜினியின் லிங்கா படத்திற்காக ப்ரோமோ சன் டி.வி யில் ஒளிபரப்ப இருகிறார்கள். அதற்கான விளம்பரத்தில் கண்ணை கசக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார். எல்லோரும் பார்த்திருப்பீர்கள்.



வியாழன், 27 நவம்பர், 2014

இசையின் வாசனை.

           
       
 

                      பழுப்பேறிய ஒரு புகைப்படத்தை பார்ப்பது போல் இருக்கிறது இப்படி பின்னோக்குவது. கோணல் வகிடெடுத்து மெலிசாய் கண்மை தீட்டிய விழி மூடி, தேன்கிண்ணத்தை சொட்டுச்சொட்டாய் பருகிறபடி இருக்கும் அம்மாவின் முகத்தை தொட்டு விலகும் ஒளியை ரசித்த என் ஏழு வயதிற்குள்ளாக தான் துளிர்த்திருக்கவேண்டும் இசையின் மீதான காதல். அப்படி உருகி உருகி என் அம்மா இசை பருகிய அந்த கருவியை உங்களில் எத்தனை பேர் பார்திருபீர்களோ! அது ஒரு சைக்கிளில் பொருத்தக்கூடிய head லைட்டுடன் சேர்ந்த ரேடியோ! P.B.ஸ்ரீநிவாசும், ஜானகியும், சுசிலாவும் காற்றில் சுகந்தம் பரப்பிய இரவுகள் தொலைத்த விடுதி நாட்களை எட்டுவயதில் சபிக்க அந்த ஒரு காரணம் போதுமானதாக  இருந்தது. 

திங்கள், 24 நவம்பர், 2014

தோழியின் விடைபெறல்!

கையசைத்து நீ விடைபெறுகையில்
கடந்து சென்ற பட்டாம்பூச்சியால்
கவிதையாகிறது அந்த நொடி!!

ஞாயிறு, 23 நவம்பர், 2014

கத்தரி கைகள்

   கத்தரிக் கைகளை அவசரமாய் கத்தரிக்காய்கள் என படித்து சமையல் குறிப்புக்காக ஓடிவந்தவங்க அப்படியே எஸ்கேப் ஆகிடுங்க, அப்புறம் சேதாரத்துக்கு நான் பொறுப்பு இல்லை.
   
          

வியாழன், 20 நவம்பர், 2014

நாசாவிலுமா தூங்குமூஞ்சி ஆபிசர் !!

    

  ஒரு ஆண்டுக்கு முன் ரிப்போர்டரில் தூங்கி கொண்டே நாசாவில் சம்பளம் வாங்க ஆசையா?? என்றொரு தலைப்பில் ஒரு துணுக்கு ஒன்று படித்தேன். நம்ம ஊர்ஆபிஸ் ஜோக் கள் எல்லாம் நினைவுக்கு வந்தன.

ஞாயிறு, 16 நவம்பர், 2014

கனவில் வந்த காந்தி 4

           

           அதென்ன காந்தி நாலு?? ஒன்னுமில்லங்க கில்லர்ஜி அண்ணா ஒரு பதிவு போட்டிருந்தார் கனவில் வந்த காந்தி 1. படிச்சுக்கிட்டு வரும்போதே ஒருவேளை காந்தி என்னையும் கேள்வி கேட்டுவிடுவாரோ என சிறுமூளை எச்சரிக்க, ஓடி போய் பார்த்தேன். தொடர் பதிவு தான் என்ற போதும் பெரிய மனசு பண்ணி, அண்ணா என்னை அந்த பதிவில் சேர்க்கவில்லை. அவர்க்கு அங்கேயே நன்றி சொல்லிவிட்டு, ஒரு fake லீவ் லெட்டரை சமர்ப்பித்துவிட்டு வந்தேன். அந்த லெட்டரை  தில்லையகம் சகாஸ் நம்பிய போதும் ........விதி வலியது பாருங்க. கரந்தை அண்ணா நம்பல.  இதுல லிங்கி ருக்கார்.
   

வெள்ளி, 14 நவம்பர், 2014

நாங்க எல்லாம் அப்பவே அப்புடி!




                       அப்போ ஒன்பதாம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்தேன். (போய்க்கிட்டிருத்தேன் னு சொல்லு ஆனா படிச்சுக்கிட்டுன்னு மட்டும். இப்போவே ஆரம்பிச்சுட்டீங்களா?? ஒ! அது என் மைன்ட் வாய்ஸா). எங்க இங்கிலிஷ் சார்

ஞாயிறு, 9 நவம்பர், 2014

இதுக்கு என்ன பதில் சொல்லட்டும் மோடி சாப்??

  மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று அதை விடுவதில் என்கிறார் மாவோ. பாருங்க நான் அரசியல் எழுதவேண்டாம் னு நினைகிறேன். மோடிவிட மாட்டேன்கிறார்.

வெள்ளி, 7 நவம்பர், 2014

எனது வானுக்குக் கீழே!

 ஒரு ஒப்பந்தம்





              நண்பர்களே! நம்மில் பலருக்கும் வாழ்வில் ஏதோ ஒரு பருவத்தில் ஒருமுறையேனும் மேகங்களை நேரம் போவதறியாது பார்த்த அனுபவம் இருக்கும். ஒரே மேகம் ஒவ்வோரு  கண்களுக்கும் வெவ்வேறு வடிவம் காட்டும். பார்த்துக் கொண்டிருப்பவர்கே கூட முந்தைய நொடிக்கும் அடுத்த நொடிக்கும் வடிவம் மாறி வித்தை காட்டி விடும். அது போலவே ஒரு கதை அல்லது பாடல் என்பது அமைந்துவிடுகிறது. அது கொள்கலனின் வடிவம் கொள்ளும் திரவம் போல் அவரவர் மனம் கொடுக்கும் வடிவம் கொள்கிறது. பார்க்கும் எண் ஆறு என்பதும் ஒன்பது என்பதும் அவரவர் நிற்கும் இடத்தை பொறுத்தது தானே. 

வெள்ளி, 24 அக்டோபர், 2014

கைப்பை -4

டைரி:

கடந்த பதிவை படிச்சீங்களா? இல்லைனா கொஞ்சம் இங்க சொடுக்கி படிச்சுடுங்களேன். இல்லன்னா கன்டியுவிட்டி மிஸ் ஆகும் அதனால சொல்லுறேன். என்னது நீங்க ஏற்கனவே படிச்சாச்சா. அப்போ கண்டின்யூ பண்ணுங்க.

திங்கள், 20 அக்டோபர், 2014

நிறையத்துடிக்கும் தேநீர் கோப்பை!




விரலிடுக்கில் வழிந்துவிடப்போகும்
கடைசித்துளியை பத்திரப்படுத்தும்
எத்தெனங்களோடு சொன்னாய்
கீப்-இன்-டச்!!

சனி, 18 அக்டோபர், 2014

உப்புமா எனும் விடுமுறை


கூகிளில் சுட்டது


ராஜபக்சேவின் சட்டையை
உங்கள் அறையில் பத்திரமாய் இருந்தபடியே
உலுக்கிவிட்ட ஒரு இற்றைக்கும்
சமந்தா வின் புன்னகைக்கு
ஒரு லைக் தட்டலுக்கும் இடையே
தட்டிவிடுகிறீர்கள் உங்கள் மனைவியின்
உப்புமா குறித்தொரு பகடியை

புதன், 15 அக்டோபர், 2014

இதுக்கு என்ன தலைப்பு கொடுக்கிறது?????

              

அப்படியே இந்த வார்த்தையையும் கத்துகோங்க:)

       எங்க ஊர்ல வைகாசித் திருவிழா வரும். அப்போ கடைசி மூணுநாள் ஏரியாவே களைகட்டும். தாத்தா பூசாரி இல்லை, ஆனா அவர் தான் எங்கள் முனியப்பன் கோயிலில் ஆடு வெட்டுவார் (so என் பேரை பார்த்து நான் பிராமின் என நினைத்தவர்கள் இப்போ புரிஞ்சுக்கங்க நான் non-Brahmin:) அதில் பால் குடம் எடுக்கும் நாளில் நடக்க முடியாத பெரியவர்களை தவிர சாதி மத பேதம் இல்லாம ஊரே காமராஜர் சிலையில் இருந்து ரெங்கவிலாஸ் வரை உள்ள சாலையில் தான் இருக்கும்.
                    

செவ்வாய், 14 அக்டோபர், 2014

வெற்றுத்தாள் புன்னகை








உனக்கான கவிதைகளில்
ஒரு பந்தயக்குதிரையாகவும்
உன்னோடான தருணங்களில்
நொண்டிக்குதிரையாகவும் என் சொற்கள்

வெள்ளி, 10 அக்டோபர், 2014

கொஞ்சம் ENGLISH-PART IX




                                                கொஞ்சம் English எழுதி ரொம்ப நாள் ஆச்சுப்போலவே!
இந்த முறை கொஞ்சம் ஜாலியா ஒரு புதிர் விளையாட்டு. இன்னொரு tab ல விடைதட்டி என் கிட்ட மட்டும் தான் மார்க் வாங்க முடியும், நீங்க எவ்ளோ வாங்கி இருக்கிங்க னு உங்களுக்கு தெரியும் இல்லையா:)(எக்ஸாம் ஹால் ல question பேப்பர் கொடுக்கிறதுக்கு முன்னால இப்படி லெக்சர் கொடுத்து பழகிடுச்சு)

வியாழன், 9 அக்டோபர், 2014

பெற்றோர் தவற விடக்கூடாத ஒரு நூல்!

               ஒரு படத்தை ரிலீஸ்க்கு முன்னமே ப்ரிவியு ஷோ ல பார்க்கும் பரபரப்புக்கும், சுவரஸ்யத்துக்கும் சற்றும் குறைவில்லாது இருந்தது நிலவன் அண்ணாவின் நூல்கள் வெளியிடப்படும் முன்னரே வாசிக்கக் கிடைத்த வாய்ப்பு. அதை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். நூல்களை விமர்சிக்கும், அதுவும் நிலவன் அண்ணாவின் நூல்களை விமர்சிக்கும் அளவு நம்ம பெரிய ஆள் எல்லாம் இல்லைங்க. எனவே இது நூல் அறிமுகம் தான். 

திங்கள், 6 அக்டோபர், 2014

நிலவன் அண்ணா நூல் வெளியீட்டுவிழா-மினி பதிவர் சந்திப்புகூட்டம்

                         
தமிழ் இளங்கோ அண்ணா,கரந்தை அண்ணா,மைதிலி மற்றும் மகி,நிறை,கிரேஸ் மற்றும் அவரது கணவர் ஆல்பர்ட் வினோத் அவர்கள்.
                                நேற்று 5-10-2014 கவிஞர் முத்துநிலவன் அண்ணாவின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா புதுகையில் ஐந்து மணிக்கு தொடங்கி இரவு பத்து மணிவரை சீரும், சிறப்புமாக நடந்தது. விழாவை பற்றி தெளிவா, சுருக்கமா தெரிஞ்சுக்க தென்றல் கீதா அக்காவின் இந்த பதிவை பாருங்க. இன்னும் பலரும் இந்த விழாவை பற்றி பல்வேறு கோணத்தில் எழுதுவாங்க. so,நேற்று நான் சந்திக்க வாய்ப்புகிடைத்த அன்பு நட்புகளையும், சகோகளையும் பற்றி இங்க சொல்லப்போறேன்.

வெள்ளி, 3 அக்டோபர், 2014

கைப்பை -3





 டைரி 

                  வரவர நிறைக்குட்டி பேச்சில்  நகைச்சுவை ஊற்றெடுக்கிறது. ஒரு செருப்புக்கடையை  கடந்த போது சொன்னாள் "அம்மா, இந்த செப்பல் கடைகாரர் நல்ல புத்திசாலிதான். நான் "ஏன்டா அப்டி சொல்லுற?" பாருங்கம்மா கோவிலுக்கு பக்கத்துல வைச்சுருக்காரே! அங்க செப்பலை தொலைச்சவங்க, இங்க வாங்கிக்குவாங்க இல்ல".

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

சிதைக்கப்ப(ட்)ட முடியாதவளின் சின்ன அறிவுரை!!





 *எனது வலி உனது வலி அல்ல என்பதை
உனது செய்கையால் காட்டியபின்
உன்னை நிராகரித்த என் முடிவு சரிதான் என
அழுத்தமாய் நிறுவியதற்கு நன்றி!

புதன், 24 செப்டம்பர், 2014

காமெடி கணக்கு !! ட்ராஜிடி எனக்கு!!




     போன வாரத்தில் ஒரு மூணு நாள் நான் கணிதத் திறன் மேம்பட்டுப்பயிற்சியில் கலந்துகொண்டேன். (ஆமா நான் இங்கிலீஷ் டீச்சர் தான்). கணக்குல அவ்ளோ ஆர்வமா அப்டீன்னு அவசப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துராதீங்க. பாரதியார் போல "கணக்கு எனக்கும் பிணக்கு " தான். ஆனா விதி யாரை விட்டுச்சு. தமிழக அளவில் கற்றல் திறன் ஆய்வு நடத்திய போது புதுகை அரசுப்பள்ளிகளில் உயர்தொடக்கப்பள்ளி  மாணவர்கள் (ஆறாம்  வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை) கணக்கில் ரொம்ப வீக்கா இருக்கிறதா தெரிய வந்ததாம். (அப்ப இங்கிலீஷ் சூப்பரா படிக்கிறாங்கலாமா? இது கணக்கு மிஸ் தோழி வனிதாவின் புலம்பல்) எனவே புதுகையில் மட்டும் 288 ஆசிரியர்களுக்கு கணிதத் திறன் பயிற்சி அளித்து மாணவர்களை முன்னேற்றுவது  என கல்வித்துறை முடிவெடுத்து இப்படி பயற்சி கொடுத்தார்கள். தமிழாசிரியர்கள் மட்டும் விருப்பம் இருந்தால் கலந்துகொள்ளலாம் மற்றவர்கள் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும். (நீ தாய்மொழியை கைவிட்டதற்கு இது தான் தண்டனை என்று புலம்பியது என் மனசாட்சி)

     இப்படி நொந்து நூடில்ஸ் ஆகி வகுப்புக்கு போனா,  ட்ரைனர்கள் புத்திசாலிதனமாக எங்களை போல பிற பாட ஆசிரியர்களும் கலந்துகொள்ளப் போகிறோம் என்று தெரிந்து வைத்துக்கொண்டு எங்களை வகுப்புக்குள் கொண்டுவர நிறைய புதிர்கள் தயாரித்துக்கொண்டு வந்திருந்தார்கள். சரிவிடு T.N.முரளிதரன் அண்ணா மாதிரி நாமளும் இந்த புதிர்களை பயன்படுத்தி இனி ஒரு ரெண்டு மூணு பதிவு தேத்தலாம் னு என்னை மனசை தேத்திக்கிட்டேன். ஆனா பாருங்க அந்த பயிற்சியில் கொடுக்கப்பட்ட சில புதிர்கள்  அண்ணனின் புதிர்களை போல் இல்லாமல் வழக்கமான வகுப்பறை புதிர்களை போல நிறைய லாஜிக் பொத்தல்களோடு இருந்தது. அதை இன்னொரு பதிவில் சொல்கிறேன். இப்படியே மூனுநாளையும் அந்த ரெண்டு பயிற்சியாளர்களையும் (பெண்கள்) வச்சு வனிதாவும் நானும் கலாய்ச்சே காலிபண்ணினோம். ஆனாலும் பயிற்சியின் இறுதியில் நாங்களும், ட்ரைனர்களும்  நல்ல நண்பர்கள் ஆகியிருந்தோம். (எங்களுக்குள ரொம்ப சைலெண்டா தான். பின்ன அமைதியான பெண்ணாய்  மெய்ண்டைன் பண்ணுற  நம்ம இமேஜ் டேமேஜ் ஆககூடத்தில்ல)

சனி, 20 செப்டம்பர், 2014

உங்க நம்பர் ப்ளேட் என்ன சொல்லுது!!

                        




aha!!


       காலை நேர பரபரப்புகளுக்கு இடையே கவனம் கோரவே செய்கின்றன சில நம்பர் ப்ளேட்கள். பொதுவாக போலீசும், பிரஸ் பெருமக்களும் தங்கள் துறையை நம்பர் ப்ளேட்டில் குறித்து வைத்துக்கொள்வது வழக்கம் இல்லையா? என் தோழி ஒருவரது மகன் இப்போ மெடிசின் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். அந்த தோழியின் வண்டியில் டாக்டர்களின் அடையாளமான சிலுவை மீது சுற்றிக்கொண்டிருக்கும் பாம்பு போல ஒரு லோகோ இருக்கிறது. வருங்கால டாக்டரின் அம்மாவாம்!! என் தம்பியின் பல்சருக்கு 5014 எனும் எண்கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. பின்ன SOLA என அதை எழுதமுடியும் சாத்தியத்தில் என் அப்பாவின் பேரான சோலைராஜ் என்பதில் பாதி வந்து விடுகிறதே. 6055என்பதை  bossஎன்றும், 8055என்பதை  BOSS என்றும், 8045 என்பதை BOYS எழுதியிருக்கும் நம்பர் ப்லேட்களை பார்த்திருக்கிறேன். PRAISE THE LORD களும் அதிகம். 

தமிழ்ப்பற்று!!

                     பத்துவருடத்தில் மிக பெரிய சமூக மாற்றம் ஒன்று நிகழ்ந்திருப்பதை இந்த வண்டி ஓவியங்களில் கண்கூட காணமுடிகிறது. முன்பெல்லாம் வண்டிகளில் தங்கள் ஆண் வாரிசுகள் பெயரை மட்டுமே எழுதிவைத்திருப்பார்கள். ஆனால் இப்போ ரெண்டு பெண்ணாய் இருந்தாலும் சரி, ஆணும் பெண்ணுமாய் இருந்தாலும் சரி அந்த பெயர்களை எழுதிவைத்திருக்கிறார்கள். குழலி, யாழி என எழுதி இரண்டு பெயருக்கும் பொதுவாய் னி போட்டு எழுதியிருக்கும் மருது சங்கர் அண்ணாவின் வண்டி இன்னும் மனக்கண்ணில் ஸ்டாண்ட் போட்டு நிற்கிறது.





                  நாங்க bad பாய்ஸ், அடங்க மாட்டோம்டா மாதிரியான அட்ராசிட்டி பசங்க எல்லாம் அதிக பட்சம் இருபத்திநான்கு வயதுக்குள் தான் இருக்கிறார்கள். (அப்பறம் என்ன? வீட்ல இருக்கிறவங்க ஒரு  கல்யாணம் பண்ணி வச்சாங்கன்னா அந்த இடத்தில் லவ் birds படம் தான்). இந்த நம்பர் ப்ளேட் கலாட்டாவில் தமிழக அளவில் திருவள்ளுவர், ஜீசுஸ், பிள்ளையார், மெக்கா, பெரியாரை விட பாதிக்கப்பட்ட ஒரு தலைவர் இருக்கிறார்.  அவர் தன் சொத்தையெல்லாம் தேச  விடுதலைக்காக செலவு செய்தவர், மக்கள் பணிக்காக போற்றுதலுக்கு உரிய பல தியாகத்தை செய்திருக்கிறார் என்றும் படித்திருக்கிறேன்.  அவர் எதற்காக போராடினார் என நன்கு உணர்ந்த, புரிந்துகொண்ட இளைஞர்கள் அவரை நெஞ்சில் நிறுத்தி பணி செய்வதை பார்த்தும் இருக்கிறேன். ஆனால் அந்த பேருக்காக மட்டும் அவரை தன் ப்ளேட்டில் வைத்திருப்பவர்கள், அவரும் தானும் ஒன்று என கருதுகிறார்கள் என்பதே எனக்கு கவலை அளிக்கிறது. ஒரு நாள் முதல்வர் போல் ஒரு நாள் ட்ராபிக் போலிஸ் வேலை கிடைத்தால் அதில் ஒரு சிலரையாவது நிறுத்தி அந்த படத்தில் இருப்பவரை பற்றி ஒரு நாலு விஷயம் சொல்லுப்பா என கேட்க ஆசை. f.b, டீ-ஷர்ட் என அவர் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார். "பலபேர் கமெண்ட் போட்டாலும் அதில் உள்ள ஒரு பொண்ணு கமெண்டுக்கு மட்டும் ரிப்ளை பண்ணி லைக் தட்டினால் நீயும் என் தோழனே" என்பது மாதிரியான பல படுகொலைகளை சந்தித்திருக்கும் இவர் மேற்கோள்கள் திருக்குறளுக்கு ஈடாக ரீமேக் ஆகி தவிக்கின்றன. சே என்றால் நண்பன்(தோழர்) என்று பொருளாம். இந்த பாழாய்ப்போன முகபுத்தகத்தால் வீணாய் போன மற்றொரு சொல் "தோழர் " எனும் தோழர் வெங்கியின் ட்விட் / ஸ்டேட்டஸ் சரிதானே:))

புதன், 17 செப்டம்பர், 2014

தந்தை போற்றுதும்!!

             அம்மா அன்பாக இருப்பார்கள். சரி அப்போ அப்பா அன்பாகவே இருக்கமாட்டாரா? அப்பா என்றால் கண்டிப்பாக இருப்பார். அதனால் பெரும்பாலான பாடல்கள், வாசகங்கள் தாய்ப்பாசம் பற்றியே இருக்கும். அதற்காக தந்தை பாசம் என்பது தாய் பாசத்திற்கு சற்றும் குறைந்ததல்ல. தாய் கருணையின் வடிவம் என்றால் தந்தை ஆசிரியரின் வடிவம் இல்லையா? சான்றோனாக்குதல் தந்தை கடனே எனும் பழந்தமிழ் பாடல் பொய்யா? ஆம் தந்தை என்று நான் இத்தனை நேரம் குறிப்பிட்டது எந்தை பெரியாரை(வழக்கமான எழுத்துப்பிழை என கருதிவிடாதீர்கள்) தான். அவர் நம் சமுதாயத்திற்கு கண்டிப்பான தந்தையாய் தான் இருந்தார். பின் ஏன் அன்னை தெரசாவை போல் தந்தை பெரியாரின் படங்கள் மற்றும் மேற்கோள்கள் பரவலாக பயன்படுத்தப்படுவதில்லை.  குஷ்பு என்றால் கற்பு பற்றிய கருத்து என எளிதாக நினைவு வைத்துக்கொள்ளும் தமிழ் மனங்கள் பெரியார் என்றால் கடவுள் இல்லை என்ற நாத்திகராக பார்க்கும் பிற்போக்கான மனங்கள் இன்னும் இருப்பதேன்?


ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

உங்களால் இது சாத்தியமானது, நன்றி.

        சென்ற வருடம் மே மாதம் புதுகையில் தமிழாசிரியர் வலைபதிவர் பயிற்சி பட்டறை ஒன்று எங்கள் மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் தலைமையில், நிலவன் அண்ணாவின் ஆலோசனையின் பேரில் நடந்தென்று ஏற்கனவே நான் ஒரு முறை குறிப்பிட்டிருக்கிறேன் அல்லவா? அதில் நிறைய தமிழாசியர்கள் எனக்கும் கஸ்தூரிக்கும் நல்ல நண்பர்கள் என்பதால் நாங்கள் ஆங்கில ஆசிரியர்களாக இருந்த போதும் எங்களுக்கு அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பலரும் பதிவுலகில் அப்போதே கலக்கிக் கொண்டிருக்க, சும்மா டைரி எழுதுவது போல் எழுதிவந்த எனக்கு அது சிறந்த அனுபவமாக இருந்தது. அப்போ வலையில் என்ன எழுத வேண்டும் எப்படி எழுதவேண்டும் என எங்களுக்கு வகுப்பெடுத்த கரந்தை ஜெயக்குமார் அண்ணா இன்று அவர்  versatile blogger award எனும் விருதை என்னோடு பகிர்ந்து கொண்டுள்ளார். முதல் முறையா கற்றுக்கொடுத்த ஆசிரியரிடம் நல்ல ரேங்க் வாங்கியதை போல ஒரு பீல். நன்றி அண்ணா!(படித்த காலத்தில் அப்படியெல்லாம் ரேங்க் வாங்கியதிலேயே) அவரை பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை என்றாலும்  ஒரு சொல். அவரது எல்லா பதிவுகளும் தகவல் களஞ்சியங்களாக இருக்கும். அவரை போல பயனுள்ள ஒரு பதிவு நான் எழுதிவிட்டாலும் போதும்:) என்னைஉற்சாகப்படுத்தி வழிநடத்தும்  கஸ்தூரி, நிறை முதலான எல்லா நட்புநெஞ்சங்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி!!!

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

சைன்ஸ் வாத்தியார் மோடியின் சாதனை!!

                         






            ஒரு  ஜூவி கொடுங்க என நான் கடையில் கேட்கும்போது அருகில் நிற்கும் பெண்களின் முகத்தில் அப்படி ஒரு அதிர்ச்சியை காணமுடிகிறது. நல்ல வாசிப்பு பழக்கம் உள்ள ஒரு தோழி என் கைப்பையை ஆராய்ந்து நான் படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் பற்றி அறியமுயல்கையில் ஒரு ரிப்போட்டரை பார்த்து "ஏ! என்ன இதெல்லாம் படிக்கிற? என ஏதோ படிக்ககூடாததை படித்ததைபோல் ரியாக்சன் காட்டிய அனுபவசூழலில் விசு அண்ணா என்னை தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார் அதுவும் அரசியல் பதிவுக்கு !!! நன்றி அண்ணா!

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

குறும்பா _3








யாரோ போல தான் நீயும் -என
நான் கருதும் நாளில்- புத்தனுக்கு
புதிய போட்டியாக  இருப்பேன் நான்

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

அந்த நாலு பேருக்கு நன்றி!!

என்னை நானாக்கி இருக்கும்
அந்த நாலு பேருக்கு நன்றி!!!



1. அண்ணா ரவி சார் (என் தமிழாசிரியர்)
2. சிவா(குமார்) சார் (என் இங்கிலீஷ் டீச்சர்)
3. முனியப்பன் சார் (என் சைன்ஸ் சார்)
4. சாந்தி மிஸ் (என் u.k.g மிஸ்)

புதன், 3 செப்டம்பர், 2014

தங்கமீன்களில் அப்படியென்ன சிறப்பு?

    நோட்டுல நான் நோட் பண்ணிய சில விசயங்கள் :)



    
            பாடக்குறிப்பேடு என சொல்லபடுகிற நோட்டுகள் என்றவுடன் ரெண்டுவரி, நாலு வரி தான் முன்பு நினைவுவரும். பரிணாம வளர்ச்சி அடைந்து ரூல்டு மேலும் வளர்ச்சி பெற்று அன்ரூல்டு என கடந்து கிராப், காமெண்டரி எப்போவரும் என ஆசையை இருக்கும். ஏன்னா அப்போல்லாம் அந்த ரெண்டு நோட்டுகள் மட்டும் தான் மெல்லிய அட்டையோடும், அழகிய படங்களோடும் வரும். 

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

வசனங்களால் வாழும் வடிவேலு

          
                ஒரு தீக்குச்சி உரசி, தன்னையும் தமிழகத்தையும் ஒருசேர பற்ற வைத்த முத்துகுமாரின் கடிதத்தை படித்தீர்களா? அரசியல் நயவஞ்சத்தில் அது நம்மத்து போனது தனிக்கதை. தன் அழ்ந்த, பரந்த வாசிப்பையும், தமிழ் பற்றையும், வலியையும் ஒரு சேர கொட்டி அவர் எழுதிய அந்த கடிதத்தில் ஒரு விஷயம் அதை  படித்து பல வருடங்கள் ஆனா பின்னும் என்னை இதை எழுதிவிடுமாறு தூண்டியபடியே இருந்தது. ஆமாம் அந்த கடிதத்தில் அவர் வடிவேலுவின் "அது போன மாசம்" எனும் வசனத்தை பயன்படுத்தி இருந்தார்.

               முன்பெல்லாம் மெத்தப் படித்தவர்கள் சினிமாவில் மேற்கோள் காட்ட கண்ணதாசன், வைரமுத்து போன்ற பெரும் கவிகளின் வரிகளையும், இளைஞர்கள் மற்றும் சராசரி மக்கள் ரஜினியின் வசனங்களையும் பயன்படுத்துவார்கள். ஆனால் ஒரு காமெடியனின் வசனம் ஒரு இனத்தின் தவிர்க்க முடியாத அங்கமாகி போன வரலாற்றின் முதல் பக்கமாய் வடிவேலு இருக்கக் காண்கிறேன். சமூக ஊடகங்கள் பல்கிப் போன இந்நாளில் எல்லா காமெடி வசனங்களும் எல்லோராலும் பயன்படுத்தப்படுகிறது தான். ஆனால் வயது வித்தியாசம் இல்லாமல் இப்படி நம் மக்கள் முன்முதலில் பரவலாக வடிவேலுவின் வசனங்களை பயன்படுத்தத் தொடங்கியத்தை கண்ணெதிரே பார்த்தபடி நகர்கிற சாட்சியாய் நானே  இருக்கிறேன்.
            வடிவேலுவின் தனிப்பட்ட கருத்தும் வாழ்வும் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கலாம். எனினும்  அவரது எளிய நகைச்சுவை வசனங்களை நான் பயன்படுத்தியதே இல்லை என சொல்பவர்கள்  மிக குறைவே. புனிதம் என்று நாம் கூறிக்கொண்டு கேள்விகள் கேட்ட முடியாதா ஜீரோ ஹவர் அபத்தங்களை மிக எளிதாய், போகிற போக்கில் போட்டு உடைத்துவிடும் வடிவேலுவின் பாங்கே தனிதான். அதற்கென்று ஒரு உடல்மொழி வேறு வைத்திருப்பார். நான் உன்னை பத்து மாசம் சுமந்து பெத்தவடா என்று செண்டிமெண்டா யாரேனும்  வசனம் பேசினா வடிவேலு தான் ஞாபகம் வருகிறார்.
         அவனா நீ, அலெர்ட இருக்கணும், be careful நான் என்னைய சொன்னேன், அவ்ளோ நல்லவனாடா நீ, அவன் ரொம்ப நல்லவன்டா, கிளம்பிட்டாங்கய்யா, அவ்வ்வ்வவ், கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல, நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு, இப்படி இன்னும் சொல்லிகிட்டே போகலாம். என்னை பொறுத்தவரை நகைச்சுவையா பேசுறது எல்லாருக்கும் கைவராத கலை. அப்படி பேசுறவங்களை உடனே பாஸ் என்று அழைக்கத் தொடங்கி விடுவேன். so வடிவேலு பாஸ், ஹீரோக்கள் வசனங்களை மட்டுமே பேசிக்கொண்டிருந்த மக்களை தன் வசனத்தை தவிர்க்க முடியாமல் பேசவைத்த மாஸ். வடிவேலு வசனங்களால் வாழும் கலைஞன் என்று சொல்லி இப்போ கிளம்புறேன், நெக்ஸ்ட் மீட் பண்ணலாம்.

பி.கு
என்னை போலவே வடிவேல் வசனங்களை பயன்படுத்துவோர் உங்க பின்னூட்டத்தில் உங்களுக்கு பிடிச்ச வசனத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே:))

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

பிள்ளைக்கதைகளும், பெருவணிகமும்!!

                                                                                                                                                                                                  





சின்ட்ரெல்லாவை நினைவுபடுத்தும்
இளம்சிவப்பு சோயாக்கள்
நார்ச்சத்து மிகுந்ததென நம்பவைப்பேன் என்னையே !!

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

பேரம் பேசினால் தவறா? (நிபந்தனை உட்பட்டது*)

கென்னடியும் இதை தானே சொல்றார்!
     பேரம் என்றாலே நமக்கு அரசியல் குதிரை பேரங்கள் தானே(!?) நினைவுக்கு வருகின்றன? ஆனா பெரிய மனுசங்க விஷயம் எல்லாம் நமக்கு எதுக்கு? பெட்ரோலோ, பெரிய வெங்காயமோ விலையேறினால் புலம்பத்தொடங்கும் என் சக நடுத்தர வர்க்கத்தினருக்கும், ச்சே ச்சே இதெல்லாம் ஒரு விசயமே இல்லை என்று பகட்டுக்காக பேசும் சுவிஸ் பாங்கில் அக்கவுன்ட் இல்லாத க்ரீமி லேயர் நடுத்தர வர்க்கத்துக்கும் நான் கேட்க நினைக்கும் கேள்வி இது.
           

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

உனக்கும் மழை என்று பேர்!







உன் மச்சமாக முடியாததால்
தன் எச்ச நொடிகளை புனிதமாக்க
உன் இதழோரம் சிந்திமடிகிறது - மழைத்துளி!!

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

கொஞ்சம் ENGLISH-PART Vlll


 இந்த முறை கொஞ்சம் Englishல  numbers பயன்படுத்தி சொல்லப்பட்டு வரும் phrasesஅதாவது மரபு தொடர்களை பார்க்கலாமா? ( வாங்க நம்பர் சொல்லி அடிப்போம்)

 a bunch of fives  

முதல் முறை படித்தபோது ஏதோ கொத்துக்கொத்த பூக்களோ என்று நினைத்தேன். அப்புறம் தான் தெரிஞ்சது இது தான் அதுன்னு!

He gave that thief a bunch of fives

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

கைப்பை-ii




 ஒரு நிகழ்வு
         சுதந்திர தினத்திற்காக மாணவர்களுக்கு பாரத சமுதாயம் என்கிற பாரதியார் பாடலை பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தேன்.
   இனி ஒரு விதி செய்வோம்
   அதை எந்தநாளும் காப்போம்
   தனியொருவனுக்கு உணவில்லை எனில்
   சகத்தினை அழித்திடுவோம்
என அவர்களது குரல் உச்சம் தொட்டபோது சிலிர்த்துப்போனது!! இவங்க செஞ்சாலும் செஞ்சுவாங்க:)

சனி, 9 ஆகஸ்ட், 2014

விட்டுவிடு வீழ்ந்துவிட்டேன்- பாகம் 2






குருதி தொட்டும், எழுத்தில் அடங்காது
என்னை சூழழ்ந்து கிடக்கும் உனக்கான சொற்களை
மொழிபெயர்க்கும் வழியறியாது திகைத்து நிற்கும் - என் இரவுகள்.

புதன், 6 ஆகஸ்ட், 2014

ஒரு கோப்பைத்தேநீருக்கு நேரம் ஒதுக்குங்கள் !

  





          ஒரு காபி குடிக்கலாமா? பெரும்பாலான சினிமாக்களில் ஒரு யுவதியை கவர நாயகன் கேட்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று. ஆனால் நான் வளர்ந்த சூழலில், வாழ்கிற சூழலில் பெரும்பாலான பெண்கள் தேநீர் குடிப்பதையே பார்த்துவருகிறேன். என் ஆரம்பப்பள்ளி நாட்களில் எனது பாட்டியும் அவரது தோழிகளும் ஒரே நாளில் அடிக்கடி தேநீர்க் குடிப்பதை பார்த்திருக்கிறேன். பல நேரம் உணவு கூட தேவைப்படாது அவர்களுக்கு. அப்படி கூடி, கதை பேசும் அவர்களை எரிச்சலை அடக்கிக்கொண்டு கடக்கும் மருமகள்களையும் கவனித்ததுண்டு.

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

செவ்வாய், 29 ஜூலை, 2014

ஆறாவது படிக்கிற பையன் லவ் பண்ணினா தப்பா?

          




        அவன் அந்த சின்ன வயதில் எப்படி இவ்வளவு பெரிய மனுசத்தனத்தோடு இருக்கிறான் என வியப்பாய் இருக்கும். சத்துணவு உணமாட்டான். சீருடை தரமாட்டோம் என ஆசிரியர்கள் கோபம் கொண்டால் அமைதியாய் தலையை குனிந்து கொள்வான். மற்றவர்கள் போல நீயும் வாங்கி முடிந்த அளவு சாப்பிட்டுவிட்டு கொட்டவேண்டியது தானே? ஏன் திட்டு வாங்குற? என கேட்டால், சாப்பாட்டை வீணாக்குவது பெரிய பாவம். உணவை மதிக்காத வேலையை நான் செய்யமாட்டேன் என்று சொல்லாலே எனக்கும் ஒரு அறைகொடுத்தான். ஆனால் அவனது தோரணையே அவனுக்கு சில பிரச்சனைகளை தேடித்தந்தது. அவன் மீது சில டீச்சர்கள் மட்டும் எரிச்சலில் இருந்தார்கள்.
       

செவ்வாய், 22 ஜூலை, 2014

கைப்பை- 1



அமென்!!

உலகின் வெகு சுவாரஸ்யமான விசயங்களில் ஒன்னு பெண்களுடைய கைப்பை என சொல்லகூடிய ஹான்ட் பேக்! ஒரு பெண்ணின் கைப்பை முழுமையாக பார்க்கமுடிந்தால் கூட அவளைப்பற்றி எடைபோட்டுவிட முடியாது. ஆனால் அத்தனை சுலபமாக அவளது கைப்பையையும்  (நம்பிக்கையை) பெற்று விட முடியாது!! இப்போதெல்லாம் கைப்பையின் அளவு குறையக்குறைய அதன் விலை அதிகமாக இருக்கிறது! பயன்படுத்தும் கைப்பையை கொண்டே அந்த பெண்ணின் ரசனையை, வயதைக்கூட  ஊகிக்கமுடியும்.

வெள்ளி, 18 ஜூலை, 2014

உறைந்து மீள்கிறது அங்காடித்தெரு!



தாள்கள் தீர்ந்த பின்னும்
அட்டை தேய்த்தும் வாங்கியாயிற்று!
காது கிழிந்துவிடும் வாய்ப்போடு
கைவிரல்கள் அறுக்கத்தொடங்குகிறது
சில கனவுகளையும் புன்னகையும்
நிரப்பிய நெகிழிப்பைகள் !