வியாழன், 13 மார்ச், 2014

வாழ்வின் வாசனைகள் !!


அன்றைய மல்லிகைகளை
அன்றே விற்றுவிடவேண்டிய அவசரம்
அடுத்தடுத்த நாளில் எல்லாம்
புதுமலர்கள், புது வாசம் 
பூத்தொடுத்தல் போல்
அத்தனை நயத்தோடு நகர்வதில்லை 
பூக்காரியின் வாழ்க்கை !!

16 கருத்துகள்:

  1. என்றும் ஏக்கத்துடன் தான் அவர்களின் வாழ்க்கை...

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான்..அவர்கள் வாழ்வு மலர்ச்சியாய் வாசனையாய் இருக்கிறதா என்பது சந்தேகமே...நல்ல கவிதை மைதிலி.

    பதிலளிநீக்கு
  3. உண்மைதான்மா.பெரும்பாலும் பூ வைக்க முடியாத பெண்களே பூ விற்கும் பரிதாபம்.

    பதிலளிநீக்கு
  4. உண்மையை நன்கு உணர்த்திய சிறப்பான வரிகளுக்குப்
    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தோழி .

    பதிலளிநீக்கு
  5. பூமணக்கிற அளவு அவர்களது வாழ்க்கை மணப்பதில்லை என்பதே உண்மை/

    பதிலளிநீக்கு
  6. டீச்சர்,வாழ்வின் வாசனைகள் அருமை. எனக்குஉங்களுடைய இன்னொருகவிதைஞாபகம் வருது , பூமலர!,மலர!வாடுகிறது பூக்காரியின் முகம்,

    பதிலளிநீக்கு
  7. உண்மை தான் தோழி. நிதர்சனக் கவிதை.

    பதிலளிநீக்கு
  8. பூ விற்பவரின் வாழ்க்கை.... அவர் தொடுக்கும் மலர் போல அத்தனை சுகமாய் இல்லையே என்பதில் வருத்தம்.....

    நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  9. பூக்காரியின் வாழ்க்கை மட்டுமல்ல எல்லோரது வாழ்க்கையும் அப்படித்தன்!

    Each day is a new day; a fresh day!
    அன்றைய நளை, அன்றைய பொழுதை அப்பொழுதே கழித்து விட வேண்டும்! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதம்தான்! நாளை விடியுமா? தெரியாது! நேற்று? முடிந்து போன ஒன்று! இன்று? அதுதான் நமக்கானது! இன்றே வாழ்!

    நல்ல பொருள் பொதிந்த கவிதை சகோதரி! மட்டுமல்ல பூக்காரியும், பூவும் சொல்லுவது அதைத்தான்!

    அழகான சிந்தனை தங்களிடமிருந்து!!!

    அதனை நயத்தோடு நகர்வதில்லை// 'அத்தனை நயத்தோடு நகர்வதில்லை? or அதனை நயத்தோடு நர்த்துவதில்லை?

    பதிலளிநீக்கு
  10. உண்மைதான்....
    நயத்தோடு நகர்ந்தால் பூ விக்க வேண்டியதில்லையே...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. பூக்கள் மட்டுமல்ல தோழி எல்லா நாட்களுமே நயத்தோடு நகர்வதில்லையே இந்த நிமிடம் தான் நிஜம் அடுத்த நிமிடம் என்ன ஆகும் என்று யாருக்கு தெரியும். இன்றைய பொழுதை நாம் இனிமையாகவும் மனிதாபிமானத்தோடும் களிக்க முயல்வோம் என்பதையே இந்த அருமையான கவிதை கூறுகிறது.
    அத்துடன் அவர்கள் ஏக்கமும் வேதனையும் வெளிப்படுத்தும் அருமையான கவிதை தோழி! ஒரு சிறு கவிதையில் பெரிய தத்துவமே சொல்லிவிட்டீர்களே! இப்படி அசத்திகொண்டு, ஆதங்கம் ஏனோ ஆங்கி.........
    வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
  12. பூக்களை வாடுவதற்கும் விற்றுவிட வேண்டும்
    இல்லையேல்
    அவர்கள் வாழ்க்கையல்லவா
    வாடிவிடும்
    அருமை சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  13. “வெள்ளரி
    பிஞ்சுகள்
    விற்கின்றன”- என்றொரு கவிதை எழுதியவர் பெயர் சட்டென்று நினைவிற்கு வரமறுக்கிறது. “இந்த விதவை(துணி தைப்பவர்)க்கு இந்த மாதம் எத்தனை முகூர்த்தம் தெரியுமா?” என்றொரு (பாலச்சந்தர் பட -அவள் ஒரு தொடர்கதை- வசனம்)எனப் பலவற்றை நினைவூட்டுகிறது உன் பூக்காரி கவிதை. ஒரு நல்ல கவிதை பல நல்ல கவிதைகளை நினைவூட்டும் அலலது எழுதத்தூண்டும்.

    பதிலளிநீக்கு
  14. எதார்த்தம் சொல்லும் கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. பூக்காரியின் வாழ்க்கையை நான்கு வரிகளில் அருமையாக சொல்லிவிட்டீர்கள். வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு