திங்கள், 24 பிப்ரவரி, 2014

நம்பிக்கையின் வேர்கள் !!!

கோடையின் இறுதிநாள் வரை
கொடுந்தகிப்பை பொறுத்து காத்திருக்கும்
வேர் அழுந்த ஊன்றி
வெற்றுக்கிளைகளோடு ஒற்றை மரம்.....

எஞ்சிய ஒன்றிரண்டு இலைகளிலும்
என்றென்றும் தேக்கி வைக்கும்
அண்டிவரும் உயிர்களுக்காய்
அன்பு எனும் அரிய வரம்!

கூடு தொலைத்த குருவியொன்று
நாடிவந்து மலர்த்தக்கூடும்
வாடி நிற்கும் மரத்திற்காய்
வசந்தத்தின் மெல்லிதழை....

நெடுங்கனவை ஊடறுத்து
தொடும் நினைவின் விரல்களைப்போல
நெற்றி சுடும் ஞானம் தரும்
முற்றம் நிற்கும் வேப்பமரம் !!

37 கருத்துகள்:

  1. ரசித்தேன் அரிய வரத்தை...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. ஆனாலும் இம்புட்டு சுறுசுறுப்பு ஆகாது!!!
    அண்ணா எனக்கு கண்ணை கட்டுது !!
    நன்றி !நன்றி! நன்றி!

    பதிலளிநீக்கு
  3. சின்னக் கவிதை எனினும்
    சிந்திக்க வைக்கிறது.


    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்

    கூடு தொலைத்த குருவியொன்று
    நாடிவந்து மலர்த்தக்கூடும்
    வாடி நிற்கும் மரத்திற்காய்
    வசந்தத்தின் மெல்லிதழை....

    ஆகா.....ஆகா.... என்ன வரிகள்.... மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ரூபன் சகோ .ரசித்தமைக்கும் கருத்திற்கும் !

      நீக்கு
  5. நம்பிக்கையின் வேர்கள் !!! இங்கே வரிகளாக ஊருடுவுகின்றன

    பதிலளிநீக்கு
  6. அவர் வலையுலகத்தையே கட்டுக்குள் தானே வைத்துள்ளார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரக்டா சொன்னீங்க !
      வருகைக்கும் ,+ ஒண்ணுக்கும் நன்றி சார்!

      நீக்கு
  7. /நெற்றி சுடும் ஞானம் தரும்
    முற்றம் நிற்கும் வேப்பமரம் !!// இந்த இருவரிகளில் எவ்வளவு அழகு!!!உண்மை!

    மிக அருமையான கவிதை மைதிலி!

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரி
    அழகான வரிகள். நம்பிக்கையோடு நடைபோடும் எந்த ஒரு பயணமும் தோற்பதில்லை. கவிதைக்குள் குட்டிக்கதையாய் தான் எனக்கு தெரிந்தது. தொடருங்கள் சகோதரி. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரக்டா சொல்லிடீங்க !
      அதுல ஒரு கதை இருக்கு !
      நன்றி சகோ ஊன்றிபடித்தமைக்கு !

      நீக்கு
  9. "//அண்டிவரும் உயிர்களுக்காய்
    அன்பு எனும் அரிய வரம்!//"

    ரசிக்க வைத்த வரிகள்.
    வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  10. எஞ்சிய ஒன்றிரண்டு இலைகளிலும்
    என்றென்றும் தேக்கி வைக்கும்
    அண்டிவரும் உயிர்களுக்காய்
    அன்பு எனும் அரிய வரம்!
    மிக மிக அருமை தோழி மரங்களுக்கு கூட எவ்வளவு அன்பு எத்தனை நம்பிக்கை. .ஓவொன்றும் அருமையான வரிகள் நன்றாகவே ரசித்தேன்....! வாழ்த்துக்கள் தோழி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி இனியா .ஒவ்வொரு முறையும் மனத்துக்கு நெருக்கமாகிரீர்கள்!

      நீக்கு
  11. நம்பிக்கை பொதிந்த அழகான வரிகள். வாழ்த்துகள் தோழி.

    பதிலளிநீக்கு
  12. நம்பிக்கை ஊட்டும் கவிதை. அருமை

    பதிலளிநீக்கு
  13. ரசித்தேன். அருமையான வரிகள்.

    பதிலளிநீக்கு
  14. ரசனையான கவிதை.வாழ்த்துக்கள்மா

    பதிலளிநீக்கு
  15. எஞ்சிய ஒன்றிரண்டு இலைகளிலும்
    என்றென்றும் தேக்கி வைக்கும்
    அண்டிவரும் உயிர்களுக்காய்
    அன்பு எனும் அரிய வரம்!//

    அன்பு எனும் இந்த அரிய வரம் நம் அகத்தில் இருந்து விட்டால் நம் அகம் (வீடு) சிறியதாக இருந்தாலும், பலரைத் தாங்கும் சக்தி உள்ளதாய் இருக்கும்! ஆறறிவு படைத்த நாமும் தேக்கி வைப்போம் இந்த அன்பு எனும் அரிய வரத்தை!!

    அருமையான,சிந்திக்க வைக்கும் வரிகள்!

    பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. so நம்ம அகம் என்னும் வார்த்தையில் வீடு கட்டிடீங்களே ?
      நன்றி சகோ!

      நீக்கு
  16. கவிதையின் முத்தாய்பான
    இருவரிகள் மிக மிக அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சார்,உங்கள மாதிரி பஞ்ச கொடுக்க முடியுமா?!

      நீக்கு
  17. நெற்றி சுடும் ஞானம் தரும்
    முற்றம் நிற்கும் வேப்பமரம் !! - அடடே!
    போதி மரத்தடியில் புத்தருக்கு ஞானம்,
    வேப்ப மரத்தடியில் என் தங்கைக்கு ஞானம்! மரபு மரபு மரபு ஓசை வருது... அதை இன்னும் உட்காந்து கத்துக்கிற பொறுமை இல்லதானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ! கண்டுபிடிச்சிடிங்களா ?
      கத்துக்குறேன் அண்ணா!
      இதை எழுதி முடித்தவுடன்
      உங்ககிட்ட அப்ரூவல் கிடைக்குமான்னு
      ரொம்ப பதற்றமா இருந்துச்சு அண்ணா
      ரொம்ப ரொம்ப நன்றி!

      நீக்கு
  18. நம்பிக்கை தந்த கவிதை......

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு